குழந்தைகள் கை சூப்பும் பழக்கத்தை நிறுத்துவது எப்படி? பெற்றோர் கவனத்துக்கு...!

Child Care Tips : குழந்தைகள் பொதுவாக கை சூப்புவதை வழக்கமாக வைத்திருப்பார்கள் என்றாலும் இரண்டு வயதுக்கு மேலும் தொடர்ந்தால் பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 14, 2024, 08:11 AM IST
  • குழந்தைகள் கை சூப்பும் பழக்கம் உள்ளதா?
  • பெற்றோர்கள் கவனிக்க வேண்டிய விஷயம்
  • 4 வயதுக்கும் மேல் இருத்தால் என்ன செய்ய வேண்டும்?

Trending Photos

குழந்தைகள் கை சூப்பும் பழக்கத்தை நிறுத்துவது எப்படி? பெற்றோர் கவனத்துக்கு...! title=

Child Care Tips : கைக்குழந்தைகள் மற்றும் சிறு குழந்தைகள் கை சூப்புவது பொதுவானது. இரண்டு வயது முதல் நான்கு வயதுக்குள் குழந்தைகள் கை சூப்புவதை நிறுத்திவிடுவார்கள். இருப்பினும் குழந்தைகள் தொடர்ச்சியாக கை சூப்புவதை பழக்கமாக வைத்திருந்தால் அவர்களின் பல் வரிசை பிரச்சனைகள் உருவாகும். இதனை கவனத்தில் கொண்டு பெற்றோர்கள் குழந்தைகளின் கை சூப்பும் பழக்கத்தை நிறுத்த முயற்சி எடுக்கலாம். 

குழந்தைகள் கை சூப்புவதற்கான காரணங்கள் : 

குழந்தைகள் கை சூப்பும் பழக்கம் தாயின் வயிற்றில் இருந்தே தொடங்குகிறது. இது குழந்தைகளுக்கு ஆறுதல் அளிக்கும் பழக்கமாகும். இப்படி செய்யும்போது அவர்கள் ஆறுதலாகவும், பாதுகாப்பாக இருப்பதைபோலவும் உணர்கிறார்கள். மன அழுத்தம், பதட்டம் ஆகியவற்றை சமாளிக்க கை சூப்பும் பழக்கம் குழந்தைகளுக்கு உதவியாக இருக்கிறது. இந்த பழக்கம் பொதுவாக பாதிப்பில்லாதது என்றாலும் பல் சீரமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. 

மேலும் படிக்க | கண்ணாடி vs காண்டாக்ட் லென்ஸ் - எது பெஸ்ட்? - மருத்துவர்கள் கூறுவது என்ன?

குழந்தைகள் கை சூப்புவதை எப்போது நிறுத்துவார்கள்

குழந்தைகள் பொதுவாக 7 மாதங்களுக்குள் கை சூப்பும் பழக்கத்தை நிறுத்திவிடுவார்கள். சில குழந்தைகள் மட்டும் இரண்டு வயது முதல் நான்கு வயது வரை கை சூப்பும் பழக்கத்தை கொண்டிருப்பார்கள். இது ஒரு பழக்கமாக அவர்களுக்கு மாறிவிட்டதை பெற்றோர்கள் உணர்ந்தால், குழந்தைகள் கை சூப்பும் பழக்கத்துக்கு தடை போடலாம். அதற்காக பிரத்யேகமாக சில முயற்சிகளையும் எடுத்து அவர்களின் கை சூப்பும் பழக்கத்தை முடிவுக்கு கொண்டு வரலாம். 

குழந்தைகளில் கை சூப்புவதை நிறுத்துவது எப்படி?

குழந்தைகள் கை சூப்புவதற்கான காரணத்தை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். அவர்களுக்கு சோர்வு, மனப்பதட்டம் இருக்கிறதா என பெற்றோர்கள் அறிந்து கொள்ள வேண்டும். அந்த விஷயங்களில் இருந்து அவர்களின் கவனத்தை திசை திருப்ப நீங்கள் முயற்சிப்பது நல்லது. அதற்காக குழந்தைகளின் கைகளில் மிளகாய் பொடி எல்லாம் தடவி எச்சரிப்பது மோசமானது, ஆபத்தானதும் கூட. குழந்தைகள் கை சூப்பும் போது பொம்மைகளை விளையாட கொடுக்கலாம் அல்லது ஏதேனும் ஒரு திண்பண்டங்களை சாப்பிட கொடுக்கலாம். அவர்களை எப்போதும் பிஸியாக வைத்திருங்கள். இருப்பினும் அவர்கள் கை சூப்பினால், செல்லமாக அதட்டல்களையும், எச்சரிக்கையும் கொடுக்கவும். 10 வயதுக்கும் மேல் உங்கள் குழந்தை கை சூப்புவதை தொடர்ந்தால் நீங்கள் மருத்துவரை அணுகலாம்.

மேலும் படிக்க | சோம்பேறித் தனமாக இல்லாமல் எப்போது சுறுசுறுப்பாக இருப்பது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News