போது இடங்களில் சட்டவிரோதமாக வாகனம் நிறுத்தினால் ₹ 23,000 அபராதம்!

சட்டவிரோதமாக வாகனங்களை நிறுத்தினால், இன்று முதல் ரூ .23,000 அபராதம் செலுத்த வேண்டும்!

Last Updated : Jul 7, 2019, 09:29 AM IST
போது இடங்களில் சட்டவிரோதமாக வாகனம் நிறுத்தினால் ₹ 23,000 அபராதம்! title=

சட்டவிரோதமாக வாகனங்களை நிறுத்தினால், இன்று முதல் ரூ .23,000 அபராதம் செலுத்த வேண்டும்!

விதிமுறைகளை மீறி வாகனம் நிறுத்துபவர்களுக்கு நாளை முதல் 23 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என மும்பை மாநகராட்சி அறிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை முதல், பிரஹன் மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் (பிஎம்சி) பராமரிக்கும் 26 பொது வாகன நிறுத்துமிடங்களுக்கு வெளியே உங்களின் வாகனம் நிருத்தபட்டால் அது உங்களுக்கு பெரும் அதிர்சியை தரும். அங்கீகரிக்கப்பட்ட 26 பொது வாகன நிறுத்துமிடங்களில் 500 மீட்டர் சுற்றளவில் வாகனங்களை நிறுத்துவதற்கு மும்பை போக்குவரத்து காவல்துறை ரூ .5,000 முதல் 23,000 வரை கடுமையான அபராதம் விதிக்கத் தொடங்கும்.

நகராட்சி ஆணையர் பிரவீன் பர்தேஷி டி.என்.ஏவுக்கு ஒரு குறுஞ்செய்தி மூலம் இதை உறுதிப்படுத்தினார். நியமிக்கப்பட்ட வாகன நிறுத்துமிடங்களுக்கு வெளியே சட்டவிரோதமாக நிறுத்துவதைத் தடுப்பதே இதன் நோக்கம் என்று அவர் கூறினார்.

ஆரம்பத்தில், பி.எம்.சி பராமரிக்கும் அனைத்து 146 பொது வாகன நிறுத்துமிடங்களுக்கும் அருகே சட்டவிரோதமாக நிறுத்துவதற்கு அபராதம் விதிக்க முன்மொழியப்பட்டது. முந்தைய 1 கி.மீ முதல் 500 மீட்டர் வரை இப்பகுதியின் சுற்றளவை குடிமை ஆணையம் தளர்த்தியுள்ளது. மும்பையில் 35 லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் 1,900 சதுர கி.மீ சாலை இடத்தைப் பயன்படுத்துகின்றன, மேலும் பார்க்கிங் செய்வதற்கு மிகக் குறைந்த இடமும் உள்ளது என்பதைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது.

மும்பையில் 26 அங்கீகரிக்கப்பட்ட பொது வாகன நிறுத்தங்கள் அமைந்துள்ளன. இந்நிலையில் இந்த நிறுத்தங்களை சுற்றி 500 மீட்டர் தூரத்திற்கு விதிமுறைகளை மீறி வாகனத்தை நிறுத்தினால், 5 ஆயிரம் ரூபாய் முதல் 23 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என மும்பை மாநகராட்சி மற்றும் மும்பை போக்குவரத்து காவல் துறை அறிவித்துள்ளது.

இதில், அபராத தொகையும் வாகனத்தை விதிமுறைகளை மீறி நிறுத்தப்பட்ட இடத்தில் இருந்து அகற்றுவதற்கான கட்டணமும் அடங்கும். மேலும் அபராதம் செலுத்துவதில் கால தாமதம் ஏற்பட்டால் வாகனத்தை பொறுத்து நாளுக்கு நாள் அபராத தொகை அதிகரிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விதிமுறைகளை செயல்படுத்துவதற்கு முன்னாள் ராணுவ அதிகாரிகளும், தனியார் பாதுகாவலர்கள் போக்குவரத்து காவல்துறைக்கு உதவ வேண்டும் என்றும் மும்பை மாநகராட்சி அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

 

Trending News