மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன நடிகர் சைஃப் அலிகான்!

பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் ஒரு வாரத்திற்கு முன்பு மர்ம நபர் ஒருவரால் குத்தப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். 

Written by - R Balaji | Last Updated : Jan 21, 2025, 08:25 PM IST
  • சைஃப் அலிகான் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார்
  • கைதான நபரை 6 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவு
மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன நடிகர் சைஃப் அலிகான்! title=

வீடு திரும்பிய சைஃப் அலிகான்: கடந்த வாரம் பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் விட்டுக்குள் திருடுவதற்காக நுழைந்த மர்ம நபர் சைஃப் அலி கானை கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்றார். 

ஆறு இடங்களில் கத்திக்குத்து வாங்கி இரத்த வெள்ளத்தில் இருந்த சைஃப் அலிகான் மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது முதுகுத்தண்டில் இருந்து 2.5 இன்ச் கத்தி துண்டு அகற்றப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 

இதையடுத்து இன்று (ஜன.21) சிகிச்சை முடிவடைந்த நிலையில், பிற்பகலில் அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அந்த வீடியோவில் வெள்ளை நிற சட்டையும் நீள நிற ஜீன்ஸும் அணிந்திருந்த அவர் இடது கையில் கட்டுடன் செல்வதைப் பார்க்க முடிந்தது. 

மேலும் படிங்க: உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் CEO யாரெல்லாம் தெரியுமா?

திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டவர் கைது

கடந்த ஜனவரி 16ஆம் தேதி மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள சத்குரு ஷரன் என்ற 12 மாடி குடியிருப்பில் உள்ள சைஃப் அலிகான் வீட்டில் முகமது ஹரிபுல் இஸ்லாம் என்பவர் திருட முயற்சித்துள்ளார். இதனைக் கண்ட பெண் பணியாளர் ஒருவர் சத்தம் போடவே தூக்கத்தில் இருந்து எழுந்த சைஃப் அலி கான் அந்த திருடனை தடுக்க முயன்றுள்ளார். அப்போது அவரை அந்த நபர் கத்தியால் குத்திவிட்டு தப்பிச்சென்றார். இதனைத் தொடர்ந்து சைஃப் அலி கான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். 

சைஃப் அலி கானின் வீட்டில் திருட முயற்சித்த முகமது ஹரிபுல் இஸ்லாம் இச்சம்பவத்திற்கு பின்னர் தலைமறைவாக இருந்து வந்தார். இந்த நிலையில், அந்த நபரை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், நேற்று முன்தினம் (ஜன.19) தானேவில் வைத்து கைது செய்தனர். 

போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவு

பின்னர் ஆவணங்களை கைப்பற்றி விசாரணை செய்த நிலையில் அவர் இந்தியாவை சேர்ந்தவர் அல்ல. வங்கதேசத்தை சேர்ந்தவர் என்ற தகவல் கிடைத்தது. இதையடுத்து மும்பை நீதிமன்றத்தில் ஆஜார்படுத்திய நிலையில், நீதிமன்றம் அவரை ஆறு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்துள்ளது.

மேலும் படிங்க: சாம்பியன்ஸ் டிராபி ஜெர்சி விவகாரம்: பிசிசிஐ மீது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புகார்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News