பொன்மகள் வந்தாள் திரைப்பட வெளியீட்டில் நீடிக்கும் சிக்கல், காரணம் என்ன?

நடிகை ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள பொன்மகள் வந்தாள் திரைப்படத்தை நேரடியாக டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் தளமான அமேசான் பிரைமில் வெளியிடும் திட்டத்தை தமிழக தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் கடுமையாக கண்டித்துள்ளது.

Last Updated : Apr 26, 2020, 08:46 AM IST
பொன்மகள் வந்தாள் திரைப்பட வெளியீட்டில் நீடிக்கும் சிக்கல், காரணம் என்ன? title=

நடிகை ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள பொன்மகள் வந்தாள் திரைப்படத்தை நேரடியாக டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் தளமான அமேசான் பிரைமில் வெளியிடும் திட்டத்தை தமிழக தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் கடுமையாக கண்டித்துள்ளது.

JJ பிரெட்ரிக் இயக்கிய இந்த படம் மார்ச் 27 அன்று திரைக்கு வரவிருந்தது, ஆனால் கொரோனா வைரஸ் வெடிப்பால் ஒத்திவைக்க வேண்டியிருந்தது. இதற்கிடையில், திரையரங்குகளை மீண்டும் திறப்பதில் ஏற்பட்ட நிச்சயமற்ற தன்மையால் படத்தின் தயாரிப்பாளர்களான 2D என்டர்டெயின்மென்ட் மே மாதத்தில் நேரடி டிஜிட்டல் வெளியீட்டிற்கு திட்டமிட்டுள்ளதாக பல தகவல்கள் தெரிவிக்கின்றன. பொன்மகள் வந்தாள் தொடர்பான உரிமைகள் ஏற்கனவே ஸ்ட்ரீமிங் தளமான அமேசான் பிரைமுக்கு ரூ.9 கோடிக்கு விற்கப்பட்டுள்ளன என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் நடிகர் சூரியாவுக்கு சொந்தமான 2D என்டர்டெயின்மென்ட்-ன் இந்த நடவடிக்கையை கண்டித்து, தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார், அதில் தயாரிப்பாளர்கள் மாநிலத்தில் திரைப்பட வெளியீடுகள் குறித்து நிறுவப்பட்ட விதியை மீறியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

“தியேட்டர்களுக்காக தயாரிக்கப்பட்ட திரைப்படங்கள் முதலில் திரையரங்குகளில் வெளியான பின்னரே ஸ்ட்ரீமிங் தளங்களில் வெளியிடப்பட வேண்டும் என்பது விதி. இந்த தயாரிப்பாளர் இந்த விதியை மீறி தனது திரைப்படத்தை OTT தளத்திற்கு வழங்கியுள்ளார். அதை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். நாங்கள் தயாரிப்பாளரைத் தொடர்பு கொண்டு இதைச் செய்ய வேண்டாம் என்று கூறினோம், ஆனால் அவர் எங்கள் பேச்சைக் கேட்கவில்லை. எனவே, அவரது நிறுவனம் தயாரிக்கும் அனைத்து திரைப்படங்களையும், அவருடன் தொடர்புடைய அனைத்து திரைப்படங்களையும் நேரடியாக OTT தளங்களில் வெளியிடுமாறு நாங்கள் அவரிடம் கூறியுள்ளோம். அந்த திரைப்படங்கள் எங்களுக்கு தேவையில்லை என்பது எங்கள் கூட்டு நிலைப்பாடு,” என்று அவர் கூறினார்.

எனினும் படத்தின் தயாரிப்பாளர் தரப்பில், முழு அடைப்புக்கு பின்னரே உறுதியான முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கையில்., “இப்போதைக்கு, தியேட்டர் உரிமையாளர்களிடையே நிலவும் கருத்து இதுதான். ஆனால் வணிகம் மீண்டும் தொடங்கப்பட்ட பின்னரே ஒரு உறுதியான முடிவு எடுக்கப்படும்,” என குறிப்பிட்டுள்ளனர்.

பொன்மகள் வந்தாள் திரைப்படத்தில் ஜோதிகா மைய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் ஒரு சுவாரஸ்யமான அம்சம் என்னவென்றால், இதில் நான்கு புகழ்பெற்ற இயக்குநர்கள் - கே பாக்யராஜ், ஆர் பார்த்திபன், பாண்டியராஜன் மற்றும் பிரதாப் போத்தன் ஆகியோர் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளனர். இதற்கிடையில், சுதா கொங்கரா இயக்கிய சூரரை போற்று திரைப்படம் சூர்யாவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமாக வெளியீட்டிற்காக காத்திருக்கிறது. பொன்மகள் வந்தாள் திரைப்பட வெளியீட்டில் சூர்யா எடுக்கும் முடிவை பொறுத்தே, சூரரை போற்று திரைப்படத்திற்கான திரையரங்குகள் கிடைக்கும் என்பதால் இந்த விவகாரம் கோலிவுட்டில் பெரிதும் பேசப்படும் விஷயமாக தற்போது நீடிக்கிறது.

Trending News