மாரி, சூர்யாவை சேர்க்க ஹாசினி போட்ட பிளான் - மாரி சீரியல் அப்டேட்!

Mari Zee Tamil mega serial update: மாரி, சூர்யாவை சேர்க்க ஹாசினி போட்ட பிளான்! பரபரப்பான திருப்பங்களுடன் மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

Written by - RK Spark | Last Updated : Jun 5, 2023, 11:49 AM IST
  • சூர்யா மாரியும் சரி என்று சம்மதம் சொல்கின்றனர்.
  • சூர்யா மற்றும் மாரி இருவரும் காரில் கல்யாணத்துக்கு கிளம்பி செல்கின்றனர்.
  • மாரி சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
மாரி, சூர்யாவை சேர்க்க ஹாசினி போட்ட பிளான் - மாரி சீரியல் அப்டேட்! title=

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி.  இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் மாரி மற்றும் சூர்யாவை ஒன்று சேர்க்க ஹாசினி திட்டம் ஒன்றை போட்டு மாரி ரூமுக்கு சென்று என்னுடைய பிரண்டுக்கு காஞ்சிபுரத்தில் கல்யாணம் போக முடியாது. கல்யாணத்துக்கு போனா எல்லோரும் அரவிந்த் பற்றி கேப்பாங்க அதனால் எனக்கு பதில் நீங்க போயிட்டு வாங்க உங்களுக்காக ரூம் போட்டு இருக்கேன்.  நீங்க ரூம்ல ரெஸ்ட் எடுத்துட்டு மறுநாள் காலையில் கல்யாண பாத்துட்டு கிளம்பி வாங்க என்று சொல்ல சூர்யா மாரியும் சரி என்று சம்மதம் சொல்கின்றனர். அதன் பிறகு சூர்யா தாராவிடம் பர்மிஷன் கேட்க அவளை போயிட்டு வாங்க என சொல்லி அனுப்ப சங்கரபாண்டி ஸ்ரீஜா ஆகியோர் எப்படி இருக்கீங்க என கேள்வி கேட்கின்றனர். 

மேலும் படிக்க | விழுந்தான் இடியாய்…எழுந்தான் மலையாய்… ஆரம்பிக்கலாமா..! ஒரு வருடத்தை நிறைவு செய்த விக்ரம்

ஜெகதீஷ் கிட்ட சொத்து விஷயமா பேசும்போது சூர்யா இங்கு இல்லாமல் இருப்பது தான் சரியென சொல்கிறாள்.  அதற்கு அடுத்ததாக ஹாசினி மாறிவிடும் பூஜைக்கு தேவையான எல்லா பொருட்களையும் கட்டப்பையில் எடுத்து வைத்திருக்கேன் என சொன்னேன் சூர்யா மற்றும் மாரி இருவரும் காரில் கல்யாணத்துக்கு கிளம்பி செல்கின்றனர்.  மறுபக்கம் சங்கர பாண்டி ஆடிட்டரை சந்தித்து மாறி பெயரில் இருக்கும் சொட்டுகள் எல்லாத்தையும் சூர்யா பெயருக்கு மாற்ற வேண்டும் என சொல்ல அதெல்லாம் முடியாது ஜெகதீஷ் சொன்னால் மட்டும்தான் முடியும் என சொல்லி விடுகிறார்.  இதையடுத்து மாரி மற்றும் சூர்யா ரெசார்ட்டுக்கு வர மாரி இவ்வளவு பெரிய ஹோட்டலா என்று வியக்கிறாள். ஹாசினி திட்டத்தின் படி ஹோட்டலில் முதலிரவு ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டு இருக்கிறது. 

maari

அதன் பிறகு சூர்யா ரெஸ்டாரண்டில் சாப்பிட என்ன இருக்கிறது என்று பார்க்கப் போன நேரத்தில் மாரி ரூமில் பூஜை செய்ய அப்போது கற்பூரம் ஏற்ற அந்த புகையால் ஃபையர் லேம்ப் அலாரம் ஒலிக்கிறது. இதனால் எல்லோரும் ஓடி வந்து பார்க்க பிறகு பூஜை என்று கலைந்து செல்கின்றனர். அதற்கு அடுத்ததாக சூர்யா மாரிக்கு ஃபயர் லேம்ப் பற்றிய விவரங்களை செல்கிறான்.  இதை தொடர்ந்து ஆடிட்டர் ஜெகதீஷிடம் சங்கர பாண்டி வந்து சொத்துக்களை மாற்ற வேண்டும் என்று சொன்ன விஷயத்தை சொல்ல ஜெகதீஷ் ஷாக் ஆகிறார்.  இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப் போவது என்ன என்பது குறித்து அறிய மாரி சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க | கர்ப்பத்திற்கு பின் காதலரை அறிமுகப்படுத்திய இலியானா: வைரலாகும் போட்டோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News