சிரஞ்சீவியால் மகேஷ்பாபுவுக்கு வந்த ஆபத்து! - கலக்கத்தில் டோலிவுட்!

சிரஞ்சீவி, ராம்சரண் நடிப்பில் வெளியான ஆச்சார்யா சமீபத்தில் வெளிவந்த படங்களிலேயே மிக மோசமான விமர்சனங்களைப் பெற்ற படமாக அமைந்துள்ளதாம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 10, 2022, 02:14 PM IST
  • சிரஞ்சீவி, ராம்சரண் நடிப்பில் அண்மையில் வெளியானது ஆச்சார்யா.
  • மிக மோசமான விமர்சனங்களை இப்படம் பெற்றுவருகிறது
  • ரசிகர்களின் வருகைக் குறைவால் தியேட்டர் உரிமையாளர்கள் அதிருப்தி.
சிரஞ்சீவியால் மகேஷ்பாபுவுக்கு வந்த ஆபத்து! - கலக்கத்தில் டோலிவுட்! title=

நடிகர் சிரஞ்சீவி மற்றும் அவரது மகன் ராம்சரண் உள்ளிட்டோர் நடிப்பில் அண்மையில் வெளியானது ஆச்சார்யா.

இயக்குநர் கொரட்டலா சிவா இயக்கத்தில் உருவான இப்படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் படத்தின் ரிசல்ட்டோ, மிகவும் சுமாராகவே இருந்துவருகிறது. சமூக வலைதளங்களில் கடுமையான எதிர்மறை விமர்சனங்களே இப்படத்துக்குக் கிடைத்துவருகின்றன. 

சமீபத்தில் வெளிவந்த பெரிய நடிகர்களின் தெலுங்குப் படங்களிலேயே மிகவும் மோசமான விமர்சனங்களைப் பெற்ற படமாகவும் ஆச்சார்யா அமைந்துள்ளதாம். ரசிகர்களின் வருகைக் குறைவால் தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்களும் கடும் அதிருப்தியில் இருந்துவருகின்றனர்.

                                                               

இப்படம் சுமார் 90 கோடி ரூபாய் வரை நஷ்டத்தைச் சந்தித்துள்ளதாகவும் திரை வட்டாரத்திலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்மையில் உயர்த்தப்பட்ட தியேட்டர் டிக்கெட் விலையும் இந்தப் பிரச்னைக்கு ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது.

பல வினியோகஸ்தர்கள், அடுத்த படத்துக்கான உரிமையைத் தருவதற்குப் பதிலாக இப்படத்துக்கு இழப்பீடு தாருங்கள் எனக் கோரி வருகின்றனர். வினியோகஸ்தர் ஒருவர் இது தொடர்பாக நடிகர் சிரஞ்சீவிக்குப் பகிரங்கமாகக் கடிதமே எழுதியுள்ளார்.

மேலும் படிக்க | ராஜமெளலி படத்தில் நடிப்பவர்களைத் துரத்தும் வித்யாசமான சோகம்!

                                                                         

இவையெல்லாம் ஒருபுறம் இருக்க ஆச்சார்யாவின் தோல்வி மகேஷ் பாபுவையும் விட்டுவைக்கவில்லை. மகேஷ் பாபு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள  சர்காரு வாரி பாட்டா படம் நாளை மறுதினம் வெளியாகவுள்ளது.

ஆச்சர்யாவுக்குக் கிடைத்த மோசமான அனுபவத்திலிருந்து இன்னும் வெளிவராத விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் இப்படத்துக்கு பெரும் தொகை கொடுத்து வாங்க மிகவும் யோசிக்கிறார்களாம். இதுவும் சொதப்பிவிட்டால் என்ன செய்வது என அவர்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளதாம். மகேஷ் பாபுவின் இந்தப் படத்துக்கு மட்டுமல்லாது அடுத்ததாக வரிசை கட்டி நிற்கும் மற்ற நடிகர்களின் படங்களுக்கும்கூட இந்தச் சிக்கல் எழுந்துள்ளதாம்.

இதனால் மகேஷ் பாபுவின் இந்தப் படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்தடுத்து வெளியாகும் மற்ற நடிகர்களின் படங்கள் நல்ல விலைக்குப் போகும் எனக் கூறப்படுகிறது.

மேலும் படிக்க | விஜய் படத்தைப் பங்கமாகக் கலாய்த்த இயக்குநர்! - அதுவும் இவ்வளவு ஓப்பனாகவா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News