விபத்தில் சிக்கிய சுடர்.. எழிலுக்கு பல்பு - நினைத்தேன் வந்தாய் சீரியல் அப்டேட்

Ninaithen Vandhai: இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் குழந்தைகளை விபத்தில் சிக்க வைத்து அதை வைத்து சுடரை வீட்டை விட்டு துரத்தலாம் என்று பிளான் போட்ட நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.   

Written by - RK Spark | Last Updated : Feb 27, 2024, 02:21 PM IST
  • குழந்தைகளை காப்பாற்றி விபத்தில் சிக்கிய சுடர்.
  • எழிலுக்கு ஏற்பட்ட பல்பு.
  • நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட் அப்டேட்.
விபத்தில் சிக்கிய சுடர்.. எழிலுக்கு பல்பு - நினைத்தேன் வந்தாய் சீரியல் அப்டேட்  title=

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய்.  இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மனோகரி சுடருடன் ஸ்கூலிலிருந்து வீட்டுக்கு வரும் குழந்தைகளை விபத்தில் சிக்க வைத்து அதை வைத்து சுடரை வீட்டை விட்டு துரத்தலாம் என்று பிளான் போட்ட நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது சுடர் குழந்தைகளை கூட்டிக்கொண்டு வீட்டுக்கு வந்து கொண்டிருக்கும் போது விபத்து ஏற்படுகிறது. இதைத் தொடர்ந்து எழிலுக்கு குழந்தைகள் ஸ்கூலில் இருந்து வரும்போது ஆக்சிடென்ட் ஆகிவிட்டதாக போன் கால் வர அவன் பதறியடித்து ஹாஸ்பிடல் ஓடி வருகிறான். 

மேலும் படிக்க | ஹாய் நன்னா படத்திற்கு பிறகு நானி நடிக்கும் புதிய படம்! இயக்குனர் யார் தெரியுமா?

முதலில் தமிழை பார்க்கும் எழில் உன்னை எல்லாம் நம்பி குழந்தைகளை விட்டேன் பாரு என்று கண்டபடி எட்டி உள்ளே வர குழந்தைகள் விளையாடிக் கொண்டிருப்பதை பார்த்து ஷாக் ஆகிறான். உங்களுக்கு ஒன்னும் ஆகலையே என்று கேட்க எங்களுக்கு எதுவும் ஆகல கேர் டேக்கர் காப்பாத்திட்டாங்க என்று சொல்கின்றனர். வெளியே வந்து பார்க்க சுடருக்கு தான் காலில் அடிபட்டு இருக்கிறது என்பது தெரியவந்து எழில் எதுவும் பேசாமல் அங்கிருந்து கிளம்பி வருகிறான். அதைத் தொடர்ந்து வீட்டுக்கு வரும் மனோகரி தமிழை பிடித்து சத்தம் போட எது குழந்தைகளுக்கு ஒண்ணும் ஆகல அவங்களுக்கு தான் அடிபட்டு இருக்கு என்று சொல்ல மனோகரி அதிர்ச்சியாகிறாள். செல்வி என்னமா போட்ட திட்டமெல்லாம் இப்படி வேஸ்ட்டா போயிடுச்சு என்று சொல்ல கோபமாகும் மனோகரி செவ்வியை பளாரென அறைந்து அங்கிருந்து வெளியேறுகிறாள். 

nv

மறுநாள் குழந்தைகள் கூட அடிக்கணும் என்று பிளான் போட்டு தூங்கிக் கொண்டே இருக்கின்றனர். தமிழ் அவர்களை எழுப்பி விட்டு நான் ரெடியாகி வரதுக்குள்ள நீங்க ரெடியாகி இருக்கணும் என்று சொல்லி குளிக்கச் சென்று ரெடியாகி வெளியே வர குழந்தைகள் மீண்டும் தூங்கிக் கொண்டிருப்பதை பார்த்து உங்களை பதிய விட்டால் வேலைக்காகாது என்று கவின் மற்றும் அஞ்சலியை கூட்டிச் சென்று பழுப்பில் தண்ணீர் விட்டு அவர்களை குளிக்க வைக்க அவர்களும் ஜாலியாக குளிக்கின்றனர். இந்த நேரம் பார்த்து எழில் அங்கு வர சுடர் அவன் மீது தண்ணீர் சிதறுகிறது.  இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க | வெறும் 5 கோடி பட்ஜெட்! வசூலோ 50 கோடிகள்! சாதனை படைக்கும் பிரேமலு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News