எங்கள் திருமணத்தால் சம்பாதித்துவிட்டார்கள் - தயாரிப்பாளர் ரவீந்தர்

தங்கள் திருமணத்தை வைத்து ஒரு நிறுவனம் சம்பாதித்துவிட்டதாக தயாரிப்பாளர் ரவீந்தர் தெரிவித்துள்ளார்.  

Written by - க. விக்ரம் | Last Updated : Sep 23, 2022, 08:11 PM IST
  • ரவீந்தர் பிரபல தயாரிப்பாளர் ஆவார்
  • இவர் லிப்ரா என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்திவருகிறார்
  • சமீபத்தில் இவர் மகாலட்சுமியை திருமணம் செய்துகொண்டார்
எங்கள் திருமணத்தால் சம்பாதித்துவிட்டார்கள் - தயாரிப்பாளர் ரவீந்தர் title=

நட்புன்னா என்ன தெரியுமா, சுட்டக்கதை, முருகைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட படங்களை தனது லிப்ரா புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்தவர் ரவீந்தர் சந்திரசேகர். இவர் சினிமா தயாரிப்பளராக மட்டுமல்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சி விமர்சகராகவும் தன்னை முன்நிலைப் படுத்திகொண்டார். அதில் வனிதாவுக்கும் ரவீந்தருக்கும் பிரச்னையும் உருவானது. இந்தச் சூழலில் அவர் தனியார் நிகழ்ச்சி தொகுப்பாளினியும் சின்னத்திரை சீரியல் நடிகையுமான மகாலட்சுமியை சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார்.

இந்தத் திருமணமானது இரண்டு பேருக்கும் இரண்டாவது திருமணமாகும். ரவீந்தரும், மகா லட்சுமியும் திருமணம் செய்துகொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. மேலும், இந்தத் திருமணம் பேசுபொருளாகவும் ஆனது. ஒருதரப்பினர் ரவீந்தரை உருவ கேலி செய்ய மறுதரப்பினர் அவருக்கு ஆதரவாக நின்றனர். அதுமட்டுமின்றி ரவீந்தரும், மகாலட்சுமியும் பல ஊடகங்களுக்கு பேட்டியும் அளித்தனர். அதேசமயம், திருமணம் என்பது இருவரது தனிப்பட்ட விஷயம் இதை ஊடகங்கள்தான் பெரிதாகுக்கின்றன என்றாலும் இவர்கள் ஏன் பேட்டி கொடுக்க வேண்டுமென்றும் பேச்சு எழுந்தது.

 

இந்நிலையில் திருமணத்திற்கு பின் திருச்செந்தூர் முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரும் அவரது மனைவி மகாலட்சுமியும் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு இன்று காலை வந்தனர்.

Ravindar

அப்போது ரவீந்தர் சந்திரசேகர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,"ஒரு திருமணம் இவ்வளவு பரபரப்பாக பேசப்பட்டது எனக்கே அதிர்ச்சியாகியுள்ளது. திருமணம் இவ்வளவு பிரபல்யம் ஆக வேண்டிய அவசியம் இல்லை. எங்கள் திருமணத்திற்கு முன்பு தமிழ் திரையுலகில் பிரபலத்தின் திருமணத்தை ஒளிபரப்பிய நிறுவனம் அதில் பெறாத வருமானத்தை எங்களது திருமணத்தை வெளியிட்டு பெற்றது என்பது ஒரு வித்தியாசமான செயல். 

மேலும் படிக்க | விஷால் வழக்கு இரண்டு மாதங்களுக்கு தள்ளி வைப்பு: லைகா படு அப்செட்

செல்லும் இடங்களில் எல்லாம் எங்களுக்கு வாழ்த்து கிடைப்பது மிகப்பெரிய மகிழ்ச்சி. நான் தனித்தீவுக்கு செல்வதாக சொல்வது எல்லாம் பெரிய வதந்தி" என்றார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News