பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினியின் புதிய படம் மே 28-ம் தேதி ஆரம்பம்

Last Updated : May 6, 2017, 11:15 AM IST
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினியின் புதிய படம் மே 28-ம் தேதி ஆரம்பம் title=

ரஜினிகாந்த், பா.இரஞ்சித் இணையும் புதிய படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பு மே 28-ம் தேதி தொடங்குகிறது.

‘கபாலி படத்தைத் தொடர்ந்து ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கிறார் ரஜினி. இப்படத்தை நடிகர் தனுஷ் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கோவாவில் தங்கியிருந்து படத்தின் கதை தயாரிப்பு பணியில் பா.இரஞ்சித் ஈடுபட்டிருந்தார். 

இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் படத்தின் படப்பிடிப்பு மே மாதம் தொடங்கும் என்று தனுஷ் தெரிவித்திருந்தார். அதற்கான பணிகள் தற்போது தொடங்கி உள்ளன.

கதையின் பெரும்பகுதி மும்பை தாராவி பகுதியில் நடப்பது போல அமைந்துள்ளது. இதற்காக தாராவியின் செட்டை சென்னையில் அமைக்கும் பணியில் படக்குழுவினர் இறங்கியுள்ளனர். தற்போது இந்தப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது.

இந்நிலையில் வரும் 28-ம் தேதி முதல் சென்னையில் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்த திட்டமிடப்பட்டுள்ள தாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Trending News