Astro: புதன்கிழமையின் அதிர்ஷ்ட ராசிகள்... பலன்களும் பரிகாரங்களும்!

Daily Horoscope: நிகழும் சோபகிருது வருடம், பங்குனி மாதம் 14ம் நாள், மார்ச் மாதம் 27ம் தேதி,  தேய்பிறை கிருஷ்ண பக்ஷ துவிதியை திதி, சித்திரை நட்சத்திரம் கூடிய தினம், யாருக்கெல்லாம் அதிர்ஷ்ட நாளாக அமையும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

பங்குனி மாதம் 14ம் தேதி, மார்ச் மாதம் 27ம் தேதி, புதன்கிழமை, சந்திரன் சுக்கிரனின் ராசியான துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார். இதனால் உருவாகும் பஞ்சம ராஜயோக யோகம், புதாதித்ய யோகம் ஆகியவற்றுடன் சித்திரை நட்சத்திரமும் இணைகிறது.

1 /7

ரிஷப ராசியினருக்கு மார்ச் மாதம் 27ம் தேதி, சிறப்பான நாளாக இருக்கும். இன்றைய தினம் சொத்து வாங்கும் ஆசை நிறைவேறும். நண்பர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். செயல்திறனால் கடினமான வேலைகளையும் எளிதாக முடிப்பீர்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.

2 /7

கடக ராசியினருக்கு, மார்ச் மாதம் 27ம் தேதி செல்வாக்கு நிறைந்த நாளாக இருக்கும். வாழ்க்கையில் இருந்து வந்த தொல்லைகள் தடைகள் விலகும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். மாணவர்கள் தேர்வுகளில் சிறந்து விளங்குவார்கள். ஆன்மீக விஷயத்தில் ஆர்வம் இருக்கும் முகத்தில் இருப்பவர்கள் பணியிடத்தில் பாராட்டை பெறுவார்கள்.  

3 /7

துலாம் ராசியினருக்கு, மார்ச் மாதம் 27ம் தேதி சிறப்பான நாளாக இருக்கும். வாழ்க்கையில் இருந்து வந்த தொல்லைகள் தடைகள் விலகும். புதிய தொழில் சார்ந்த எண்ணங்கள் மேம்படும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆன்மீக விஷயத்தில் ஆர்வம் இருக்கும்.   

4 /7

கும்ப ராசியினருக்கு மார்ச் மாதம் 27ம் தேதி செல்வாக்கு நிறைந்த நாளாக இருக்கும். தனம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். உறவினர்களின் மத்தியில் செல்வாக்கு மேம்படும். உங்கள் ஆளுமையை அனைவரும் போற்றுவார்கள். சாதனைகளால் மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். 

5 /7

மீன ராசியினருக்கு மார்ச் மாதம் 27ம் தேதி  அதிர்ஷ்டத்தை கொடுக்கும் நாளாக இருக்கும். உத்தியோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டகரமான வாய்ப்பு ஏற்படும். முயற்சிகளில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். வெளிவட்டாரத்தில் மதிப்பு ஏற்படும். ஆன்மிகம் சார்ந்த எண்ணங்கள் மேம்படும்.

6 /7

பணக் கஷ்டங்களில் இருந்து விடுபட, விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் மாலை சாற்றலாம். தடைகள் மற்றும் நோய்களில் இருந்து விடுபட, புதன் கிழமையன்று கோயிலுக்கு சென்று அன்னதானம் செய்யவும். விநாயகப் பெருமானுக்கு  கொழுக்கட்டை நெய்வேத்தியம் செய்வது ஜாதகத்தில் புதனை வலுப்படுத்தும்.

7 /7

பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.