சதயத்தில் சனி பெயர்ச்சி...நவராத்திரி வரை இந்த ராசிகளுக்கு எச்சரிக்கை

Shani Nakshatra Peyarchi 2023: மார்ச் 15-ம் தேதி சனி பகவான் சதயம் நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைந்தார். இந்த நட்சத்திரத்தின் அதிபதி ராகு ஆவார். இந்த நட்சத்திரத்தில் சனியின் நிலை சாதகமாக கருதப்படுகிறது, இருப்பினும் சில ராசிகளுக்கு எதிர்மறை விளைவைத் தரும். எனவே எந்தெந்த ராசிக்காரர்கள் நவராத்திரி வரை கவனமாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.

1 /6

ரிஷப ராசி: நேரத்தில் வேலையில் இருப்பவர்கள் இடமாற்றத்தை சந்திக்க நேரிடும். உத்தியோகத்தில் பெரிய மாற்றங்களைச் சந்திக்க நேரிடும். ரிஷபம் ராசிக்காரர்கள் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்க வேண்டும். இந்த நேரத்தில், நீங்கள் பணியிடத்தில் சக ஊழியர்களுடன் சிறு சிறு மோதல்களை சந்திக்க வேண்டியிருக்கும்.  

2 /6

கடக ராசி: நீங்கள் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். சிலர் வேலையை இழக்க நேரிடலாம். பணியிடத்தில் சில சிரமங்களை சந்திக்க நேரிடலாம். தொழிலில் முதலீடு செய்பவர்கள் இந்த நேரத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.   

3 /6

கன்னி ராசி: வேலை செய்பவர்களுக்கு வேலை அழுத்தம் அதிகமாக இருக்கும். உத்தியோகத்தில் இடமாற்றத்தை சந்திக்க நேரிடலாம். வியாபாரத்தில் ஈடுபடுபவர்களும் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். திருமண வாழ்வில் ஏற்ற தாழ்வுகள் ஏற்படலாம்.  

4 /6

விருச்சிக ராசி: தொழிலில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படலாம். உத்தியோகத்தில் மாற்றம் ஏற்படலாம். சனி பகவானின் ராசி மாற்றம் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்லதல்ல. பொருளாதாரத்தில் ஏற்ற தாழ்வுகள் ஏற்படலாம்.  

5 /6

கும்ப ராசி: வேலை செய்பவர்கள் தங்களுக்கு வேலை அழுத்தம் அதிகரித்திருப்பதாக உணரலாம். இந்த காலகட்டத்தில் உங்கள் மூத்தவர்கள் மற்றும் சக ஊழியர்களின் ஆதரவைப் பெறாமல் போகலாம். சொந்தமாக நிறுவனத்தை நடத்தி வருபவர்கள் புதிய முதலீடுகளைச் செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும்.  

6 /6

மீன ராசி: மீன ராசிக்காரர்களுக்கு வேலைப்பளுவும் கூடும். புதிதாக தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு இந்த காலம் சாதகமாக இருக்காது. வியாபாரத்தில் நஷ்டத்தை சந்திக்க நேரிடலாம்.