இணையத்தை அழ வைத்த அம்மா நாய்: உங்களாலும் அழாமல் இருக்க முடியாது!!

Emotional Dog Video: நாய் மிகவும் நன்றியுள்ள விலங்கு. மனிதர்களுக்கு உள்ள அனைத்து உணர்ச்சிகளும் அவற்றுக்கும் உள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 25, 2023, 05:51 PM IST
  • தற்போது வைரலாகியுள்ள வீடியோவில் நாயின் குட்டிகள் கொண்டுவரப்படுவதை காண்கிறோம்.
  • அப்போது அம்மா நாய் அறையின் ஒரு மூலையில் அமர்ந்திருக்கின்றது.
  • தனது குட்டிகளை பார்த்ததும் அதனால் தன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை.
இணையத்தை அழ வைத்த அம்மா நாய்: உங்களாலும் அழாமல் இருக்க முடியாது!! title=

வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

நாய் மிகவும் நன்றியுள்ள விலங்கு. மனிதர்களுக்கு உள்ள அனைத்து உணர்ச்சிகளும் அவற்றுக்கும் உள்ளது. அதிலும் தாய்ப்பாசம் என்பது மனிதர்களை போலவே நாய்களுக்கும் உள்ள ஒரு அரிய பண்பு. நாய்களை பற்றிய பல வீடியோக்கள் அவ்வப்போது சமூக ஊடகங்களில் வெளியிடப்படுகின்றன.

தற்போதும் ஒரு மிக சுவாரசியமான  வீடியோ இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. மன உளைச்சலுக்கு ஆளான ஒரு அம்மா நாய் அதன் குட்டிகளுடன் இணையும் காட்சி அது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி நெட்டிசன்களை கண்ணீரில் மூழ்கடித்துள்ளது. 

கோரா என்ற நாயின் உரிமையாளர் அதன் குட்டிகளை எடுத்துக்கொண்டு அதை அப்படியே விட்டிவிட்டதால், அந்த நாய் ஒரு நாய் காப்பகத்தில் சேர்க்கப்பட்டது. தன் குட்டிகளை பிரிந்தது முதல் அந்த அம்மா நாய் மிகவும் சோகமாக இருந்தது. இந்த சம்பவம் அதை மிகவும் வருத்தமடையச் செய்துள்ளது. அது மன உளைச்சலுக்கு ஆளானது. ஒரு இடத்திலேயே அமர்ந்திருந்த அந்த நாய் அந்த இடத்தை விட்டு நகரவே இல்லை. 

மேலும் படிக்க | நடுரோட்டில் மனிதர்களை போல நின்று எட்டிப்பார்த்த பாம்பு: வைரல் வீடியோ

கோராவின் பரிதாபமான நிலையைக் கண்ட மரின் மனிதநேய சமூகம், இந்த அம்மா நாயை அதன் குட்டிகளுடன் சேர்த்து வைக்க முடிவு செய்தது. அந்த நிறுவனம் அந்த நாயின் குட்டிகளை கண்டுபிடித்து கோரா நாயிடம் அழைத்து வந்தது. 

தற்போது வைரலாகியுள்ள வீடியோவில் நாயின் குட்டிகள் கொண்டுவரப்படுவதை காண்கிறோம். அப்போது அம்மா நாய் அறையின் ஒரு மூலையில் அமர்ந்திருக்கின்றது. தனது குட்டிகளை பார்த்ததும் அதனால் தன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை. சிறிது நேரம் அப்படியே இருத்துவிட்டு பின் அது ஓடிச்சென்று தன் குட்டிகளை பாச மழையில் நனைய வைக்கிறது. அவற்றுடன் கொஞ்சி விளையாடத் தொடங்குகிறது. 

இந்த வீடியோ ட்விட்டரில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு 2.4 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்களும் 1,29,000 க்கும் அதிகமான லைக்குகளையும் குவித்துள்ளது. இணையவாசிகள் இதற்கு பலவித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 

மேலும் படிக்க | தனது சொந்த திருமணத்தையே மறந்த மணமகன்! ஏன் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News