அடேயப்பா... மயில் இப்படியும் பறக்குமா... ஆச்சரியம் அளிக்கும் வைரல் வீடியோ!

Peacock Viral Video: சமூக வலைதளங்களில் ஆச்சரியமளிக்கும் வகையில், தொகைகளுடன் ஆண மயில் பறக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 

Written by - Sudharsan G | Last Updated : Aug 2, 2023, 05:59 PM IST
  • அந்த வீடியோ ட்விட்டரில் பகிரப்பட்டுள்ளது.
  • தற்போது வரை ட்விட்டரில் அந்த வீடியோ 11 லட்சம் வியூஸை பெற்றுள்ளது.
  • 17 ஆயிரத்திற்கும் அதிகமானோர் அதனை லைக் செய்திருக்கின்றனர்.
அடேயப்பா... மயில் இப்படியும் பறக்குமா... ஆச்சரியம் அளிக்கும் வைரல் வீடியோ! title=

Peacock Viral Video: இணையம் என்பது நம் அன்றாட வாழ்வோடு தற்போதைய காலகட்டத்தில் இணைந்துவிட்டது. இணையம் என்பதே ஒரு தனி உலகமாக மாறிவிட்டது. அதில் இருந்து பல்வேறு விஷயங்களை நாம் கற்றுக்கொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல்வேறு செய்திகளையும், தகவல்களையும் வழங்குகின்றன.

பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வெளியாகவும் இணையம் உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் மன கவலைகளை போக்க சமூக ஊடகங்களில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவும். இவற்றில் விலங்குகள், பறவைகளின் வீடியோக்களுக்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது எனலாம். விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம். சமூக ஊடகங்களில் சில குறிப்பிட்ட மிருகங்களுக்கு அதிக பார்வையாளர்கள் இருக்கிறார்கள். அதாவது, குரங்கு, பாம்பு, நாய், பூனை, யானை ஆகியவை இவற்றில் சிலவற்றை கூறலாம். பறவைகளை பார்த்தோமானால் மயிலுக்கு என பிரத்யேக இடமே உள்ளது. 

ஒரு மயில் அதன் பல வண்ணங்களுடன், துடிப்பான மற்றும் முழு தொகைகளை விரிப்பதைப் பார்ப்பது ஒரு அரிய காட்சி. இந்த அழகான பறவையை பறந்து செல்வது மிகவும் அரிதானது, அதுவும் நீண்ட தூரம் பறப்பது மிக மிக குறைவுதான். 

தற்போது இணையத்தில் வைரலாக இருக்கும் ஒரு வீடியோ இதைத்தான் காட்டுகிறது. ஒரு மயில் மின்சார கேபிள் போன்ற இடத்தில் அமர்ந்து, பின்னர் அது பறக்க ஆரம்பிக்கும். அது வானத்தில் அற்புதமான தொகையை விரித்து பறப்பது வெவ்வேறு கோணங்களில் படம்பிடிக்கப்பட்டுள்ளது மற்றும் பார்ப்பதற்கே அது ஒரு அற்புதமான தருணமாக உள்ளது.

வைரல் வீடியோ:

மேலும் படிக்க | நீ பாதி நான் பாதி: குரங்குடன் நபர் அடிக்கும் கும்மாளம்.. செம கியூட் வைரல் வீடியோ

மயில்கள் சரியாக பறக்கும் பறவைகள் அல்ல என்றும், அதுவும் குறைந்த அளவில் குறைந்த தூரத்தை மட்டுமே அதனால் பறக்க முடியும் என்றும் பரவலாகக் சொல்லப்படுகிறது மற்றும் நம்பப்படுகிறது. ஆனால் இயற்கை நம்மை வியக்க வைப்பதில் என்றுமே தவறுவதில்லை.

மயில்கள் பற்றிய சில அருமையான தகவல்களையும், உண்மைகளையும் இங்கு காண்போம், அதன் மூலம் அந்த பறவையின் இயல்பை அறிந்துகொள்ள இயலும். மயில்களிலும் ஆண், பெண் வகைகள் உள்ளன என்பதை அனைவரும் அறிவார்கள். ஆண் மயில்கள் மட்டுமே கண்ணைக் கவரும் வண்ணங்கள் மற்றும் அழகான அலங்கார தொகைகளை கொண்டுள்ளன.

ஆண் மயில்கள் தங்கள் தொகைகளை அவிழ்ப்பது அல்லது அதனை விசிறி போல அசைப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இதன்மூலம், அது தனது சாத்தியமான துணையை கவர்ந்திழுக்க முயற்சி செய்யும் என கூறப்படுகிறது.  ஆண் மற்றும் பெண் இருபாலரும் 'மயில்' ஒரே பெயரில் தமிழில் அழைக்கப்பட்டாலும், ஆங்கிலத்தில் "Peacock" என்ற வார்த்தை ஆணையும், "Peahen" என்பது பெண்ணையும் குறிக்கிறது.

மயில்கள் வண்ணமயமான தொகைகள் உருவாக பல ஆண்டுகள் ஆகும். 1963ஆம் ஆண்டு இந்தியாவின் தேசியப் பறவையாக மயில் அறிவிக்கப்பட்டது. துணையைத் தேர்ந்தெடுக்கும் போது பெண் மயில்கள் தான் அதனை தேர்ந்தெடுக்கும். மயில்கள் ஒரு காலத்தில் பணக்காரர்களுக்கு உணவாக இருந்தன. மயில்கள் முழுமையாக வெண்மையாக இருக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட இனப்பெருக்கம் மூலம் இந்த பண்பை அடைய முடியும்.

மேலும் படிக்க | ‘அதுக்காக’ செல்ல சண்டை போட்ட மணமக்கள்: வேற லெவல் வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News