சென்னை மாநகர காவல் புதிய ஆணையராக ஏ.கே.விஸ்வநாதன் நியமனம்

Last Updated : May 13, 2017, 06:11 PM IST
சென்னை மாநகர காவல் புதிய ஆணையராக ஏ.கே.விஸ்வநாதன் நியமனம் title=

தமிழகத்தில் 17 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் மற்றும் நியமனம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. 

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:

சென்னை மாநகர காவல் ஆணையராக டாக்டர் ஏ.கே. விஸ்வநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். 
காவல் ஆணையராக இருந்த கரண் சின்கா தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினராக நியமிக்கப்படுகிறார். 

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினராக இருந்த சுனில்குமார் சிங் ஊர்க்காவல் படை ஏ.டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார் என அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News