ஜன., 12-ம் தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும்!

இந்த ஆண்டில் நடைப்பெறும், தமிழக சட்டசபை முதல் கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. 

Last Updated : Jan 8, 2018, 12:48 PM IST
ஜன., 12-ம் தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும்! title=

ஆண்டுதோறும் சட்டசபை முதல் கூட்டத் தொடரில், ஆளுனர் பங்கேற்று உரையாற்றுவது வழக்கம், அந்த வகையில் இன்று நடைபெற்ற முதல் கூட்டத்தொடரில் தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்று உரையாற்றினார்.

கூட்ட தொடரில் கலந்துகொள்வதற்காக அவர் இன்று காலை 9.55 மணியளவில் சட்டசபைக்கு வந்தனர். அவரை, சபாநாயகர் ப.தனபால், சட்டசபை செயலாளர் பூபதி ஆகியோர் வரவேற்று சபைக்குள் அழைத்துச் செல்கின்றனர். 

சபாநாயகர் இருக்கையில் அமரும் கவர்னர் பன்வாரிலால் புரோகித், காலை 10 மணிக்கு ஆங்கிலத்தில் தன் உரையினை துவக்கினார். பின்னர் அவரது உரையினை தமிழில் சபாநாயகர் ப.தனபால் வாசித்தார்.

இந்த உரையில் தமிழக அரசின் சாதனைகள், புதிய திட்டங்களை விவரித்து சுமார் ஒரு மணி நேரம் ஆளுநர் பேசினார்.

இதையடுத்து, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன., 12-ம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.

Trending News