மதுரையில் செல்போன் டவர் காணவில்லை என போலீசில் புகார்!

மதுரையின் கூடல்புதூர் நகரில் ரூ.28 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட வோடபோன் செல்போன் டவர் கடந்த இரண்டு நாட்களாக காணவில்லை என போலீசில் புகாரளித்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 8, 2022, 09:25 PM IST
  • கடந்த இரு தினங்களாக மக்களுக்கு சரியாக சிக்னல் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர்.
  • இந்த பிரச்சனை குறித்து குறிப்பிட்ட நிறுவனத்திற்கு அப்பகுதி மக்கள் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர்.
மதுரையில் செல்போன் டவர் காணவில்லை என போலீசில் புகார்! title=

'கண்ணும் கண்ணும்' படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலு தனது நிலத்தில் தோண்டிய கிணத்தை காணும் என்று போலீசில் புகார் அளிப்பார்.  இதுபோன்ற ஒரு சம்பவம் தான் மதுரை நகரின் ஒரு பகுதியில் நிகழ்ந்துள்ளது.  ஆனால் இங்கு காணாமல் போனது கிணறு இல்லை, பல லட்சம் மதிப்பிலான பிரபல நிறுவனத்தின் செல்போன் டவர்.  மதுரை மாவட்டத்தில் உள்ள கூடல்புதூரின் அமராவதி தெரு பகுதியில், பிரபல தொலைத்தொடர்பு நிறுவனமான Vodafone நிறுவனத்தின் சார்பில் செல்போன் டவர் ஒன்று ரூ.28 லட்சம் செலவில் அமைக்கப்பட்டது.  கடந்த இரு தினங்களாக இப்பகுதி மக்களுக்கு சரியாக சிக்னல் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர்.

ALSO READ | வீட்டின் பூட்டை உடைத்து நகை - வெள்ளி பொருட்கள் திருட்டு

பின்னர் இந்த சிக்னல் பிரச்சனை குறித்து குறிப்பிட்ட நிறுவனத்திற்கு அப்பகுதி மக்கள் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர்.  இவ்வாறு தொடர்ந்து எழுந்த புகாரால் அந்நிறுவனம் அப்பகுதியில் அமைக்கப்பட்ட செல்போன் டவர் குறித்து ஆய்வு செய்தது.  அப்போது தான் அங்கு வைக்கப்பட்டிருந்த செல்போன் டவர் மாயமாகி இருப்பது தெரியவந்தது.  இதனையடுத்து அந்நிறுவனத்தின் மேலாளர் முத்து வெங்கடகிருஷ்ணன்  இதுகுறித்து காவல்நிலையத்தில் புகாரளித்தார்.

tower

கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணையை தொடங்கியதில், செல்போன் டவர் மாயமானது உறுதியானது.  மேலும் டவர் அமைக்கப்பட்டிருந்த நில உரிமையாளருக்கும், டவர் அமைத்துக்கொடுத்த ஒப்பந்ததாரருக்கும் இடையே பிரச்சனை இருக்கலாம், அதனால் யாரேனும் இந்த செயலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர்.  இதனை தொடர்ந்து போலீசார் செல்போன் டவர் அமைத்துக்கொடுத்த ஒப்பந்ததாரரிடமும், டவர் அமைக்கப்பட்ட நிலத்தின் உரிமையாளரிடமும் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ALSO READ | கட்டாய வழிப்பறி செய்தால் குண்டர் சட்டம்! திருநங்கைகளுக்கு எஸ்.பி எச்சரிக்கை!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News