திமுக ஆட்சி குறித்து புத்தகம் எழுதலாம் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

திமுக ஆட்சியில் அமைச்சர்களின் அலப்பறைகள் குறித்து புத்தகமே எழுதலாம் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Oct 2, 2022, 05:24 PM IST
  • இன்று காந்தி ஜெயந்தி கொண்டாடப்பட்டது
  • முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காந்திக்கும், காமராஜருக்கும் மரியாதை செலுத்தினார்
  • திமுக மீது கடுமையான விமர்சனங்களை வைத்திருக்கிறார்

Trending Photos

திமுக ஆட்சி குறித்து புத்தகம் எழுதலாம் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் title=

தேசதந்தை மகாத்மா காந்தியின் 153ஆவது பிறந்த நாள் விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அரசியல் தலைவர்கள் முதல் சாமானியர்கள்வரை காந்தியின் சிலைக்கும், புகைப்படத்துக்கும் மரியாதை செலுத்திவருகின்றனர். அதேபோல் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் நினைவுநாளும் இன்று அனுசரிக்கப்படுகிறடு. எனவே தமிழகத்தை சேர்ந்தவர்கள் காமராஜருக்கும் மரியாதை செலுத்திவருகின்றனர். அந்தவகையில், அதிமுக சார்பில் மகாத்மா கந்தியின் பிறந்தநாள் மற்றும்  காமராஜர் நினைவு நாளை முன்னிட்டு கிண்டியில் உள்ள காந்தி மண்டபம் மற்றும் காமராஜர் மணி மண்டபத்தில் மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதனைய்டுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “அதிமுக சார்பில் காமராஜருக்கு புகழ் மாலை சூட்டப்பட்டது. கிங் மேக்கராக காமராஜ் செயல்பட்டார். இந்திய அரசியலில் பல தலைவர்களை உருவாக்கியவர். விடியாத திமுக அரசு ஏற்கனவே குழப்பத்தில் உச்சியில் உள்ளது.

 

ஆட்சி செய்யவும் தெரியவில்லை அமைச்சர்களுக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை. திமுக ஆட்சியில் அமைச்சர்களின் அலப்பறைகள் என்று ஒரு புத்தகமே எழுதலாம். ஆட்சியாளர்களுடன் அதிகாரிகளும் குழம்பிவிட்டனர். பொதுச்செயலாளர் தேர்தலை திசை திருப்பிவிட்டனர்.

மேலும் படிக்க | சென்று வாருங்கள் காம்ரேட்... கொடியேரி பாலகிருஷ்ணன் சென்னையில் காலமானார் - முதல்வர் அஞ்சலி

ஓ.பன்னீர்செல்வம் தொண்டர்களை குழப்பிவிட்டார். அவர் தரப்பு வாதம் மட்டும்தான் கூறுகிறார். ஒரு மோசடியான பித்தலாட்ட அரசியலில் பன்னீர்செல்வம் ஈடுபட்டிருக்கிறார். நல்ல ரத்தம் ஓடும் அண்ணா திமுக தொண்டர்கள் ஒருபோதும் சசிகலாவுடன் சேரமாட்டார்கள்” என்றார்.

மேலும் படிக்க | அரசு அளித்த தடையை நீக்கிய நீதிமன்றம் விரும்பத்தகாத செயல்களுக்கு பொறுப்பேற்குமா?... சீமான் கேள்வி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News