தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை :வானிலை ஆய்வு மையம்

Last Updated : Sep 8, 2017, 09:03 AM IST
தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை :வானிலை ஆய்வு மையம்  title=

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 3 நாட்களுக்கு அநேக இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும் அணைகளிலும் குறிப்பிட்ட அளவு நீரின் மட்டம் உயர்ந்துள்ளது. 

இந்நிலையில், இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்னும் 3 நாட்களுக்கு பல இடங்களில் மழை பெய்யும், அதேவேளையில் சில இடங்களில் கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இம்முறை இயல்பைவிட அதிகமாக மழை பெய்துள்ளது. அதாவது 45 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Trending News