அதிமுகவுடன் சுமூகமாக பேச்சுவார்த்தை: பிரேமலதா விஜயகாந்த்

உள்ளாட்சி தேர்தல் பங்கீடு குறித்து அதிமுகவுடன் சுமூகமாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். 

Last Updated : Dec 15, 2019, 02:05 PM IST
அதிமுகவுடன் சுமூகமாக பேச்சுவார்த்தை: பிரேமலதா விஜயகாந்த் title=

உள்ளாட்சி தேர்தல் பங்கீடு குறித்து அதிமுகவுடன் சுமூகமாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். 

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 

குடியுரிமை சட்ட திருத்த மசோதா அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பு அளிக்க கூடியது. உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக போட்டியிடவுள்ள இடங்கள் குறித்து நாளை காலைக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும். 

உள்ளாட்சி தேர்தலில் அதிமுக- தேமுதிக கூட்டணி சுமூகமாக சென்று கொண்டிருக்கிறது. இன்று மாலைக்குள் இரு கட்சிகளுக்கும் இடையே சுமூக தீர்வு எட்டப்படும் என கூறினார்.

Trending News