பேருந்தில் உயிரிழந்த தொழிலாளி உடலை நடுரோட்டில் இறக்கிவிட்டு சென்ற அவலம்!!

அரசுப் பேருந்தில் ஒன்றில் பெங்களூருவிலிருந்து ஊருக்கு திரும்பி கொண்டிருந்த 54 வயதுடைய வீரன் என்பவர் பேருந்தில் உயிரிழக்க, அவரது சடலத்தை நடு ரோட்டில் இறக்கிவிட்டு சென்றனர் பேருந்து நடத்துநர் மற்றும் ஓட்டுனர்.

Last Updated : Jan 11, 2018, 12:32 PM IST
பேருந்தில் உயிரிழந்த தொழிலாளி உடலை நடுரோட்டில் இறக்கிவிட்டு சென்ற அவலம்!! title=

அரசுப் பேருந்தில் ஒன்றில் பெங்களூருவிலிருந்து ஊருக்கு திரும்பி கொண்டிருந்த 54 வயதுடைய வீரன் என்பவர் பேருந்தில் உயிரிழக்க, அவரது சடலத்தை நடு ரோட்டில் இறக்கிவிட்டு சென்றனர் பேருந்து நடத்துநர் மற்றும் ஓட்டுனர்.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியை சேர்ந்த வீரன் (54) என்பவர் பெங்களூருவில் கட்டிட மேஸ்திரி வேலை பார்த்து வந்துள்ளார். உடல்நிலை சரியில்லாத காரணத்தால், நேற்று மதியம் தனது நண்பர் ராதாகிருஷ்ணனுடன் பெங்களூருவிலிருந்து அரசு பேருந்தில் சொந்த ஊருக்கு சென்றுள்ளார். 

வீரன் பேருந்திலேயே உயிரிழக்க, அதை அறிந்த பேருந்தின் நடத்துநர் சூளகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் வீரனின் உடலுடன் ராதாகிருஷ்ணனை பேருந்தில் இருந்து இறக்கிவிட்டார். வீரனின் உடலை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் அவரது நண்பர் ராதாகிருஷ்ணன் தவித்துள்ளார்.

தற்செயலாக அந்த வழியாக வந்த சூளகிரி போலீசார், நடந்த சம்பவத்தை அறிந்து தனியார் அமரர் ஊர்தியை ஏற்பாடு செய்து வீரனின் உடலை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளனர். வீரனின் குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

மனிதநேயமற்ற இச்செயல் மக்களிடையே பெரும் கோவத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Trending News