மோடியை விமர்சித்த ஸ்டாலின் இனி சாடெஸ்ட் என அழைக்கபடுவார்: தமிழிசை

பிரதமர் மோடியை சாடிஸ்ட் என விமர்சிக்கும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சாடெஸ்ட் என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 24, 2018, 07:53 AM IST
மோடியை விமர்சித்த ஸ்டாலின் இனி சாடெஸ்ட் என அழைக்கபடுவார்: தமிழிசை  title=

பிரதமர் மோடியை சாடிஸ்ட் என விமர்சிக்கும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சாடெஸ்ட் என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார்.

விழுப்புரத்தில் நேற்று திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், அண்மையிலே கருணாநிதி அவர்களின் சிலை திறப்பு விழாவில் மோடி அவர்களை சேடிஸ்ட் என்று நான் கூறினேன். தமிழக மக்களை கேவலப்படுத்துகிற, தமிழ்நாட்டு மக்களவைப் பற்றி கவலைப்படாத நிலையில் ஒரு பிரதமர் இருக்கிறார் என்று சொன்னால், அவரை நான் தனிப்பட்ட மோடியை அல்ல, பாஜக மோடியை அல்ல பிரதமராக இருக்கக்கூடிய மோடியை தான் சேடிஸ்ட் தான், சேடிஸ்ட் தான், சேடிஸ்ட் தான் என நான் ஒரு முறை அல்ல பலமுறை சொல்வேன் என பேசினார். 

சென்னை அமைந்தகரையில், பாஜக நிர்வாகிகளோடு, பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பேசிய நிகழ்ச்சியில் தமிழிசை சவுந்திரராஜன் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்தில் இனிமேல் தான் பாஜக விஸ்வரூபம் எடுக்கப் போவதாக தெரிவித்தார். ராகுல் காந்தியை ஸ்டாலின் முன் மொழிந்ததால், மற்றவர்கள் பின் வாங்குவதாகவும் தமிழிசை விமர்சித்தார்.

மேலும், தமிழகம் மீது அக்கறை கொண்டவர் மோடி. தமிழகம் குறித்து என்னிடம் பிரதமர் அடிக்கடி விசாரித்து உள்ளார். மோடி போன்ற நல்லவர் மீண்டும் பிரதமராக வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். அது தேர்தலிலும் எதிரொலிக்கும். எதிர்க்கட்சிகளின் பிரச்சாரம் செல்லுபடியாகாது என்றார்.

இதை தொடர்ந்து, பிரதமர் மோடியை சேடிஸ்ட் என விமர்சிக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இனிமேல் சேடஸ்ட் ஸ்டாலின் என அழைக்கப்படுவார். ராகுல் காந்தியை ஸ்டாலின் முன் மொழிந்ததால், மற்றவர்கள் பின் வாங்குவதாக விமர்சித்த தமிழிசை, தமிழகத்தில் இனிதான் பாஜக விஸ்வரூபம் எடுக்க உள்ளது. 

 

Trending News