Tamil Nadu Lockdown: தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா, இன்று முக்கிய அறிவிப்பு

தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டிப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 11, 2021, 03:43 PM IST
  • மேலும் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டிப்படலாம்
  • தினசரி தொற்று எண்ணிக்கை படிப்படியாக குறைவு
  • 11 மாவட்டங்களுக்கு தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அமல்
Tamil Nadu Lockdown: தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா, இன்று முக்கிய அறிவிப்பு title=

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை (Corona Second Wave) மெல்ல மெல்ல குறைந்துகொண்டு வருகிறது. மிக அதிகமாக இருந்த ஒரு நாள் தொற்றின் அளவு தமிழகத்தில் (Tamil Nadu) தற்போது படிப்படியாக வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளது. 

இதற்கிடையில் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் (TN CM MK Stalin) மேலும் கடுமையாக்கி, கடந்த மே 24 ஆம் தேதியில் இருந்து தளர்வுகள் எதுவும் இல்லாத முழு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார். இந்த முழு ஊரடங்கு (Full Lockdown) உத்தரவு 2 வாரங்கள் நீட்டிக்கப்பட்டது. அதன்படி தினசரி தொற்று எண்ணிக்கை படிப்படியாக குறைந்தது. அதைத் தொடர்ந்து 7ஆம் தேதி முதல் இருந்து சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.

ALSO READ | TN Ration Update: 14 வகை மளிகை பொருட்களுக்கு இன்று முதல் டோக்கன்

இந்நிலையில் தமிழ்நாட்டில் வரும்14 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடியும் நிலையில், அதனை நீட்டிப்பது பற்றியும், கூடுதல் தளர்வுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனையில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டிப்பது என முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொற்று அதிகமுள்ள மாவட்டங்கள் 
1. கோவை
2. நீலகிரி
3. திருப்பூர்
4. ஈரோடு
5. சேலம்
6. நாமக்கல்
7. கரூர்
8. தஞ்சாவூர்
9. திருவாரூர்
10. நாகப்பட்டினம்
11. மயிலாடுதுறை

இந்த 11 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அளிக்க வேண்டாம் என கூட்டத்தில் அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர். அதேசமயம் மற்ற மாவட்டங்களில் காலையில் நடைப்பயிற்சிக்கு அனுமதி அளிப்பது, அரசுக்கு வருவாய் ஈட்டும் வகையில் டாஸ்மாக் கடைகளை திறப்பது போன்ற தளர்வுகளை அளிக்கலாம் எனவும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. அந்தவகையில் தளர்வுகளுடன் கூடிய அறிவிப்பு இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாரபூர்வமாக வெளியாக உள்ளது.

இதற்கிடையில் ஜூன் மூன்றாவது வாரம் 11ஆம் வகுப்பிற்கு மாணவர் சேர்க்கை தொடங்கும் என்றும் மாணவர் சேர்க்கையின் போது என்ன மாதிரியான நடைமுறைகள் பின்பற்ற வேண்டும் என்பது குறித்தும் பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ALSO READ | இலவச தடுப்பூசி: பிரதமரின் அறிவிப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News