மாணவியுடன் தவறாக நடந்த ஆசிரியர் கைது

Last Updated : Aug 11, 2017, 02:05 PM IST
மாணவியுடன் தவறாக நடந்த ஆசிரியர் கைது title=

ஈரோடு மாவட்டம் பவானி அருகே 8-ம் வகுப்பு பள்ளி மாணவியிடம் தவறாக நடந்த உடற்கல்வி ஆசிரியரை, போலீசார் கைது செய்தனர்.

பவானி அருகே உள்ள பூதப்பாடி புனித இன்னாசியார் மேல்நிலைப்பள்ளியில் அந்த மாணவி 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவியிடம் அங்கு பணியாற்றும் ஒரு உடற்கல்வி ஆசிரியர் தவறாக நடந்து வந்துள்ளார். ஆசிரியரின் இந்த செயலால் அந்த மாணவி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

தற்கொலைக்கு முயன்ற அந்த மாணவியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் தன்னிடம் தவறாக நடந்த சம்பவத்தை அந்த மாணவி தன்னுடைய பெற்றோர்களிடம் கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோர்களும் அந்த பகுதி மக்களும் பள்ளியை முற்றுகையிட்டு அந்த ஆசிரியரை தங்களிடம் ஒப்படைக்க முறையிட்டனர். ஆனால் பள்ளி நிர்வாகம் பதில் ஏதும் கூறாததால் பள்ளி மீது கல் வீசி தாக்குதல் நடத்தினர். மேலும் அம்மாபேட்டை - மேட்டூர் சாலையில், மாணவியரின் உறவினர், பொதுமக்கள், நேற்று முன்தினம் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

இந்நிலையில் மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தவறாக நடந்துக்கொண்ட ஆசிரியர் பிரபுவை போலீசார் தேடி வந்தனர். பவானி மகளிர் போலீசார், நேற்று மாலை கைது செய்தனர். ஈரோடு மகிளா கோட்டில் ஆஜர்படுத்தி, ஈரோடு மாவட்ட சிறையில் அடைத்தனர்.

Trending News