ஜியோ, ஏர்டெல்லுக்கு கும்பிடு போடுங்க..! 5ஜி போன்கள் விலை குறையபோகுது

Affordable 5G Smartphones: ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களால் இனி இந்தியாவில் 5ஜி மொபைல்களின் விலை எல்லாம் 10 ஆயிரத்துக்கும் குறைவான விலையில் வரப்போகுது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 14, 2024, 03:28 PM IST
  • 5ஜி மொபைல்களுக்கான விலை குறையும்
  • ஏர்டெல், ஜியோ கொடுத்த நெருக்கடி
  • 10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான விலையில்
ஜியோ, ஏர்டெல்லுக்கு கும்பிடு போடுங்க..! 5ஜி போன்கள் விலை குறையபோகுது title=

ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களால் இந்தியாவில் 5ஜி மொபைல்களின் விலை மிக மிக மலிவாக இருக்கப்போகிறது. ஏனென்றால், இந்தியாவில் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் தான் 5G நெட்வொர்க் கொடுக்கும் மிகப்பெரிய நிறுவனங்கள். இரண்டு நிறுவனங்களும் 5ஜி நெட்வொர்க்குகளில் அதிக அளவில் முதலீடு செய்துள்ளன. அதனால், 5ஜி நெட்வொர்க்குகளில் வரும் மொபைல்கள் எல்லாம் மலிவு விலையில் வந்தால் மட்டுமே 5ஜி நெட்வொர்க் பயன்பாடு அதிகரிக்கும் என்பதால், மொபைல் நிறுவனங்களை 5ஜி மொபைல்களை குறைவான விலைக்கு, அதாவது 10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான விலையில் புதிய மொபைல்கள் அறிமுகப்படுத்துமாறு கேட்டுக் கொண்டிருக்கின்றன.

மேலும் படிக்க | ஜியோ பயனர்களை கவரும் ரூ.299 திட்டம்.. அனைத்துமே இலவசம், ஜாக்பாட் ரீசார்ஜ் பிளான்

இப்போது, ஏர்டெல் மற்றும் ஜியோ இரண்டும் ஸ்மார்ட்போன் நிறுவனங்களுடன் இணைந்து டேட்டா சலுகைகளை வழங்குகின்றன. அதற்காக ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகியவை Poco, OnePlus, Vivo மற்றும் Oppo, Realme மற்றும் Apple போன்ற ஸ்மார்ட்போன் பிராண்டுகளுடன் கூட்டு சேர்ந்துள்ளன. இதனால் டேட்டா மற்றும் OTT செயலிகளின் சந்தாவை ஸ்மார்ட்போனுடன் மலிவாக வழங்க முடியும். இந்தியாவில் 5ஜியின் பலன்கள் பெரிய அளவில் மக்களை சென்று சேர வேண்டுமானால், 5ஜி ஸ்மார்ட்போன்களின் விலையை ரூ.10,000க்கும் குறைவாகக் குறைக்க வேண்டும் என்று மார்க்கெட் நிபுணர்களும் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.

ஏர்டெல் சமீபத்தில் Poco உடன் இணைந்து 5G ஸ்மார்ட்போன்களின் விலையை ரூ.8,799க்கு அறிமுகப்படுத்தியது. டேட்டா பண்ட்லிங் மூலம் அறிமுகமான இந்த 5G ஸ்மார்ட்போன் மூலம் வாடிக்கையாளரின் டேட்டா நுகர்வு அதிகரிக்கும். தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் ஒரு பயனருக்கு சராசரி வருவாய் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிராமங்களுக்கு 5ஜி அணுகலை வழங்கவும் ஏர்டெல் நிறுவனம் அதன் ஸ்டோர்களை அதிகரித்துக் கொண்டிருக்கறது. இதன் காரணமாக இனி வரும் காலங்களில் இந்தியாவில் 5ஜி மொபைல்களின் விலை மிக மிக குறைவாக இருக்கும் என உறுதியாக சொல்லலாம்.

இப்போது இந்தியா முழுவதும் 70க்கும் மேற்பட்ட முக்கிய நகரங்களில் 5ஜி நெட்வொர்க் கிடைக்கிறது. குறிப்பாக, டெல்லி, மும்பை, கொல்கத்தா, புனே, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், கொச்சி உள்ளிட்ட ஒவ்வொரு மாநிலத்தில் இருக்கும் முக்கிய நகரங்களிலும் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் 5ஜி நெட்வொர்க்கை கொடுக்கத் தொடங்கியுள்ளனர். உங்களிடம் 5ஜி மொபைல் இருந்தால் இந்த நிறுவனங்களின் 5ஜி நெட்வொர்க்கை எளிதாக அணுகலாம். 4ஜி ஸ்பீடை விட டபுள் மடங்காக 5ஜி நெட்வொர்க்கின் ஸ்பீடு இருக்கும்.

மேலும் படிக்க | இலவச நெட்ஃபிளிக்ஸ் சலுகை: ஜியோ, ஏர்டெல் இரண்டில் எது பெஸ்ட்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News