ஆண்ட்ராய்டு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்த CERT-In ஆலோசனை: மொபைல் போன் பயனர்களுக்கு ஒரு முக்கிய செய்தி. இது உங்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு செய்தியாகும். பிப்ரவரி 2025 இல், இந்திய அரசாங்கம் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு ஒரு புதிய பாதுகாப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இது பலரை தங்கள் தொலைபேசிகளின் பாதுகாப்பு குறித்து கவலைப்பட வைக்கக்கூடும்.
Indian Computer Emergency Response Team
இந்த எச்சரிக்கையை இந்திய கணினி அவசரகால பதிலளிப்பு குழு (CERT-In) வெளியிட்டுள்ளது. இந்த பாதுகாப்பு குறைபாடு காரணமாக, ஹேக்கர்கள் முக்கியமான தகவல்களை எளிதில் திருடி, தொலைபேசியில் தன்னிச்சையான கோட்களை இயக்க முடியும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Android Phones: எந்தெந்த ஆண்ட்ராய்டு பதிப்புகள் பாதிக்கப்படக்கூடும்?
இந்தப் புதிய பாதுகாப்பு ஆபத்து Android 12, 12L, 13, 14 மற்றும் சமீபத்திய 15 பதிப்புகளைப் பாதிக்கலாம் என கூறப்படுகின்றது. இந்தியாவில் இந்த பதிப்புகளில் இயங்கும் தொலைபேசிகளின் எண்ணிக்கை 5 கோடியைத் தாண்டக்கூடும். இத்தகைய சூழ்நிலையில், இந்த அச்சுறுத்தல் மிகவும் தீவிரமானதாகக் கருதப்படுகிறது. மேலும் ஸ்மார்ட்போன் பிராண்டுகள் இதை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் பயனர்கள் சாத்தியமான சைபர் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கப்படுவார்கள்.
பாதுகாப்பு குறைபாடுகள் எங்கெல்லாம் உள்ளது?
இந்த பாதுகாப்பு குறைபாடு பல முக்கியமான கூறுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக CERT-In இன் கூறியுள்ளது. அவற்றுள்:
• ஆண்ட்ராய்டின் கட்டமைப்பு மற்றும் அமைப்பு (Android Framework and System)
• ARM கூறுகள் (ARM Components)
• இமேஜினேஷன் தொழில்நுட்பங்களின் கூறுகள் (Components of Imagination Technologies)
• மீடியாடெக் சிப்ஸ் (Mediatek Chips)
• குவால்காம் சிப்ஸ் மற்றும் அதன் க்ளோஸ்-சோர்ஸ் கூறுகள் (Qualcomm Chips and its Close-Source Components)
இந்த வன்பொருள் தொடர்பான சிக்கல்களால், கிட்டத்தட்ட அனைத்து ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பிராண்டுகளும் அவற்றின் பயனர்களும் சைபர் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும் என்பது கவலையளிக்கும் உண்மையாகும்.
உங்கள் தொலைபேசியை எவ்வாறு பாதுகாப்பது?
இருப்பினும், இந்தப் பாதுகாப்புக் குறைபாட்டிற்கான புதுப்பிப்பை கூகிள் ஏற்கனவே வெளியிட்டுள்ளது என்பது நிம்மதி அளிக்கிறது. இந்த அச்சுறுத்தலைத் தவிர்க்க, அனைத்து ஆண்ட்ராய்டு பயனர்களும் தங்கள் தொலைபேசிகளை விரைவில் புதுப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Tips To Keep Android Phones Safe: உங்கள் Android தொலைபேசியைப் பாதுகாப்பாக வைத்திருக்க இந்த செயல்முறைகளைப் பின்பற்றவும்:
- தொலைபேசியின் செட்டிங்க்ஸை (Settings) திறக்கவும்.
- System Updates ஆப்ஷனுக்குச் செல்லவும்.
- சமீபத்திய மென்பொருள் புதுப்பிப்புகளைப் பதிவிறக்கி நிறுவவும்.
மேலும் படிக்க | Reliance Jio Airfiber... 599 ரூபாயில் 1000 GBயுடன் 12 OTT சேனல்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ