புதிய வண்டிகளை திரும்பப் பெற்ற BMW! ஒன்றா இரண்டா? 7,20,000 கார்கள்! அதிர்ச்சியூட்டும் பின்னணி!

BMW Recall Vehicles Background : நீர் பம்ப் மின் இணைப்புகள் சரியாக இல்லை என்றும், கார்களில் தீ விபத்து ஏற்படும் ஆபத்து இருப்பதால் குறிப்பிட்ட சில வகைக் கார்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 20, 2024, 09:54 PM IST
  • புதிய கார்களை திரும்பப்பெறும் BMW!
  • கார்களில் தீ விபத்து ஏற்படும் ஆபத்து
  • கார்களை திரும்பப் பெறுவதாக அறிவித்த BMW
புதிய வண்டிகளை திரும்பப் பெற்ற BMW! ஒன்றா இரண்டா? 7,20,000 கார்கள்! அதிர்ச்சியூட்டும் பின்னணி! title=

BMW Vehicles Recall 2024 Latest Update : BMW 720,000 க்கும் மேற்பட்ட வாகனங்களை திரும்பப் பெறுவதாக அறிவித்திருப்பது கார் உரிமையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தகவல் வெளியிட்டிருக்கும் பிஎம்டபிள்யூ நிறுவனம், நீர் பம்ப் மின் இணைப்புகள் சரியாக இல்லை என்றும், கார்களில் தீ விபத்து ஏற்படும் ஆபத்து இருப்பதால் குறிப்பிட்ட சில வகைக் கார்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.

.X1, X3 மற்றும் X5 உள்ளிட்ட பல்வேறு மாடல் கார்கள் திரும்பப் பெறப்படுகின்றன. போதுமான சீல் இல்லாததால் கார்களை திரும்பப் பெற அறிவுறுத்தியதாக தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம் (NHTSA) தெரிவித்தது. ஏனெனில், இது வாகனம் தீப்பிடிப்பதற்கான சாத்தியக்கூறுகளையும், அபாயங்களையும் கண்டறிந்துள்ளது.

திரும்பப் பெறப்படும் வாகனங்கள்

2012-2015 X1 sDrive28i, X1 xDrive28i, 2012-2016 Z4 sDrive28i, 528i, 528i xDrive, 328i, 328xi, 2016-2018 X40 42,20 x82 xi, 428i, 428i xDrive, 328xi Gran Turismo, 2013-2017 X3 sDrive28i, X3 xDrive28i, 2015-2018 X4 xDrive28i, 2015-2016 428xi என சுமார் 720,000 க்கும் மேற்பட்ட வாகனங்கள் திரும்பப் பெறப்படுகின்றன.

மேலும் படிக்க | அட்டகாசமான விலையில் சாம்சங் கேலக்ஸி A55 5G ஸ்மார்ட்போன்! நவீன தொழில்நுட்பத்தின் சிறப்பம்சங்கள்!

BMW வாகனங்களை திரும்ப அழைக்கும் பின்னணி
பிஎம்டபிள்யூ 720000 வாகனங்களை திரும்பப்பெறுவதற்கு அடிப்படைக் காரணம்,ம் தண்ணீர் பம்ப் மின் இணைப்பிகள் பிரச்சனை என்றும், இந்த பிரச்சனை தீ விபத்துக்கு வழிவகுக்கும் என்றும் கூறப்படுவது, இலட்சக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு அதிருப்தியைக் கொடுத்திருக்கிறது. 

NHTSA அறிக்கையின்படி, பாதிக்கப்பட்ட வாகனங்களில் போதுமான சீல் இல்லாத நீர் குழாய்கள் உள்ளன, மேலும் காலப்போக்கில் மின்சார பிளக் இணைப்பியில் திரவம் உட்செலுத்தப்படுவதற்கு எளிதில் பாதிக்கப்படலாம். ஷார்ட் சர்க்யூட் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது என்றும், மேலும் அரிதான சந்தர்ப்பங்களில் காரில் தீ ஏற்படும் சாத்தியம் உள்ளது என்றும் கூறப்படுகிறது. திரும்பப் பெறப்படும் வாகனங்களில் தண்ணீர் குழாய்கள் மற்றும் பிளக் கனெக்டர்கள் பரிசோதிக்கப்பட்டு தேவைக்கேற்ப மாற்றப்படும்.

பாசிட்டிவ் கிரான்கேஸ் காற்றோட்ட அமைப்பின் இன்டேக் ஏர் ஹவுஸிலிருந்து பம்ப் மீது கீழே விழும் எந்த திரவத்தையும் திசை திருப்ப தேவையான சாதனம் ஒன்றும் நிறுவப்படும் என்றும் தெரியவந்துள்ளது. வாகனங்களை திரும்ப அழைக்கும் அறிவிப்பு, வாகன உரிமையாளர்களுக்கு அக்டோபர் மாதம் அனுப்பப்படும் என்று நம்பப்படுகிறது.

திரும்பப்பெறும் வாகனங்களில் பாகங்கள் இலவசமாக மாற்றித் தரப்படும். இதற்காக வாடிக்கையாளர்கள், அங்கீகரிக்கப்பட்ட BMW மையத்திற்கு தங்கள் கார்களை எடுத்துச் செல்ல அறிவுறுத்தப்படுவார்கள்.

மேலும் படிக்க | தொழில்நுட்ப முன்னேற்றத்தில் மலைக்க வைக்கும் 2024! திகைக்க வைக்கும் அதிரடி தொழில்நுட்பங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News