மலேசியா பள்ளியில் தீ விபத்து; 25 பலி

Last Updated : Sep 14, 2017, 08:43 AM IST
மலேசியா பள்ளியில் தீ விபத்து; 25 பலி title=

கோலாலம்பூரில் அருகே பள்ளியில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் மாணவர்கள் உட்பட 25 பேர் பரிதாபமாக பலியாயினர்.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இயங்கி வந்த மத போதனை பள்ளியான ‛தருல் குரான் இட்டிஃபா' பள்ளியில் அந்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 5.40 மணிக்கு திடீர் தீவிபத்து ஏற்பட்டது. 

இந்த விபத்தில் மாணவர்கள் உட்பட 25 பேர் பரிதாபமாக பலியாயினர். தற்போது தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

பலியான மாணவர்களின் உடல்கள் அருகிலுள்ள மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Trending News