EPFO செய்துள்ள மிகப்பெரிய மாற்றம்! இத்தனை பேருக்கு நேரடி பயனா?

EPFO Pension Scheme: 34 ஆண்டுகளுக்கும் மேலாக சேவை புரியும் உறுப்பினர்களுக்கு விகிதாசார அடிப்படையில் ஓய்வூதிய பலன்களை வழங்க வேண்டும் அரசிடம் அறங்காவலர் குழு பரிந்துரை செய்துள்ளது.   

Written by - RK Spark | Last Updated : Dec 9, 2022, 08:26 AM IST
  • ஓய்வூதியத் திட்டத்தில் பெரிய மாற்றம்.
  • இபிஎஸ்-95ன் கீழ் டெபாசிட் செய்த தொகையை பெற்றுக்கொள்ளலாம்.
  • மத்திய அறங்காவலர் குழு அரசுக்கு பரிந்துரை.
EPFO செய்துள்ள மிகப்பெரிய மாற்றம்! இத்தனை பேருக்கு நேரடி பயனா? title=

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) ஓய்வூதியத் திட்டத்தில் பெரிய மாற்றத்தை செய்துள்ளது, இதன் காரணமாக கோடிக்கணக்கான ஊழியர்கள் பலனடைய போகிறார்கள்.  ஓய்வூதிய  நிதியானது 6 மாதங்களுக்குள் ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு இபிஎஸ்-95ன் கீழ் டெபாசிட் செய்யப்பட்ட தொகையை திரும்பப் பெற அனுமதி வழங்கியுள்ளது.  மத்திய அறங்காவலர் குழு (சிபிடி) அரசுக்கு அளித்த பரிந்துரையில் ஆறு மாதங்களுக்கும் குறைவான சேவைக் காலம் உள்ள உறுப்பினர்களுக்கு அவர்களின் இபிஎஸ் கணக்கிலிருந்து பணம் எடுக்கும் வசதி வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தது.  இதுதவிர 34 ஆண்டுகளுக்கும் மேலாக இத்திட்டத்தில் சேவை புரியும் உறுப்பினர்களுக்கு விகிதாசார அடிப்படையில் ஓய்வூதிய பலன்களை வழங்க வேண்டும் அரசிடம் அறங்காவலர் குழு பரிந்துரை செய்துள்ளது. 

மேலும் படிக்க | EPFO-வில் பெரிய மாற்றம்: 6 கோடி பேருக்கு கிடைக்கும் நேரடி நன்மை

மத்திய அறங்காவலர் குழுவின் பரிந்துரையை அரசாங்கம் ஏற்கும் பட்சத்தில் ஓய்வூதியம் பெறுவோர்களுக்கு அதிகளவு ஓய்வூதியம் கிடைக்கப்பெறும்.  தற்போது வரை ஆறு மாதங்களுக்கும் குறைவான சேவைக்காலம் கொண்ட ஊழியர்கள் அவர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையை மட்டுமே திரும்பப் பெற அனுமதிக்கப்பட்டு வந்தனர்.  ஆனால் இப்போது ஓய்வூதிய அமைப்பு நிதி எடுத்துள்ள முடிவின்படி ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு மிகப்பெரிய தொகை நிவாரணமாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், இபிஎஸ்-95ன் கீழ் செய்யப்பட்ட டெபாசிட்களை திரும்பப் பெறுவது குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் அமைச்சகம் கூறுகிறது.  மேலும் தொழிலாளர் அமைச்சகம் கூறுகையில், இபிஎஃப்ஓ-ன் அறங்காவலர் குழு எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்ட் யூனிட்களில் முதலீடு செய்வதற்க்கு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | மாதம் ₹18500 ஓய்வூதியம் தரும் மோடி அரசின் PMVVY திட்டம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News