தேடி வரும் நோயை விரட்டியடிக்கும் 3 உணவுகள்

பருவமழைக் காலங்களில் தேடி வரும் நோய்களை விரட்டியடிக்க, உணவில் கவனம் செலுத்த வேண்டும்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 3, 2022, 05:07 PM IST
  • பருவ மழைக்காலத்தில் வரும் நோய்கள்
  • கவனத்தில் கொள்ள வேண்டிய உணவுகள்
  • 3 உணவுகளை கட்டாயம் சாப்பிட வேண்டும்
தேடி வரும் நோயை விரட்டியடிக்கும் 3 உணவுகள் title=

பருவ மழைக்காலம் தொடங்கிவிட்டாலே தொற்றுநோய் பிரச்சனைகள் என்பது பெரும் தலைவலியாக மாறிவிடும். இந்தக் காலகட்டத்தில் உடல் மிகவும் பலவீனமடைந்து விடுகிறது. இதற்கு முக்கிய காரணம் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு மண்டலம் பலவீனமடைவது தான். இதனால், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் தாங்கள் அன்றாடம் சாப்பிடும் உணவில் கவனம் செலுத்துவது அவசியம். அந்த உணவுகள் உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துவதாக இருக்க வேண்டும். 

பருவமழைக் காலத்தில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலமாக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், இந்த உணவுகளை அவசியம் நீங்கள் சேர்த்துக் கொள்ள வேண்டும். அவை எந்தெந்த உணவுகள் என்பதை இங்கே பார்க்கலாம். 
 
பருப்பு வகைகள் 

புரதம், நார்ச்சத்து, துத்தநாகம் மற்றும் மெக்னீசியம் ஆகியவை ஊட்டச்சத்துகள் பருப்பு வகைகளில் ஏராளமாகக் காணப்படுகின்றன. இந்த அனைத்து கூறுகளும் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும்.பருப்பு சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. அதே போல் பருப்பை உட்கொள்வது உடலில் ஆன்டிபாடிகள் உருவாக உதவுகிறது. இதன் காரணமாக உடலின் நோய் எதிர்ப்பு சக்தி பலப்படுத்தப்படுகிறது. பருப்பை சுத்தமாக்கிய பின்னரே சாப்பிட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

மேலும் படிக்க | Baldness & Hair Fall: வழுக்கையை போக்கும் ‘சில’ அற்புத எண்ணெய்கள்

மஞ்சள் பால்

மஞ்சள் பால் சாப்பிடுவது குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இரவில் மஞ்சள் பாலில் தேன் கலந்து குடிக்கலாம். இதனை உட்கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தி பலப்படும். மஞ்சள் பாலில் கால்சியம் ஏராளமாக உள்ளது, இது குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். எனவே, மழைக்காலத்தில் தினமும் மஞ்சள் பாலை உட்கொள்ளலாம், இவ்வாறு செய்வதன் மூலம் நோய்களில் இருந்து விலகி இருப்பீர்கள்.

உலர் பழங்கள்

உலர் பழங்களைச் சாப்பிடுவதால் உடலில் ரத்தப் பற்றாக்குறை ஏற்படாது. மனமும் கூர்மையாக இருக்கும். மழைக்காலத்தில் உலர் பழங்களை தினமும் உட்கொண்டால், அது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. நோய்களுக்கு இரையாவதைத் தடுக்கிறது. உலர்ந்த பழங்களில் புரதம், நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இதுமட்டுமில்லாமல் எலும்புகளையும் பலப்படுத்துகிறது.

மேலும் படிக்க | ஆண்மையை அதிகரிக்கும் 'டெஸ்டோஸ்டிரோன்' ஹார்மோன் நிறைந்த சூப்பர் உணவுகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News