மது-விற்கு பணம் அளிக்காத தாய்; தீ வைத்து எரித்த மகன்!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில், மதுபானத்திற்க பணம் கொடுக்காத தாயினை, 20-வயது மகன் தீவைத்து எரித்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!

Last Updated : Dec 10, 2018, 03:56 PM IST
மது-விற்கு பணம் அளிக்காத தாய்; தீ வைத்து எரித்த மகன்! title=

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில், மதுபானத்திற்க பணம் கொடுக்காத தாயினை, 20-வயது மகன் தீவைத்து எரித்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!

சம்பவத்தினையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண், தீகாயங்களுடன் தீவிர சிகிச்சையில் உட்படுத்தப்பட்டுள்ளார்.

இக்குற்றச்சம்பவத்தில் ஈடுப்பட்ட நபர் உத்தண்ட் குமார்(20 வயது) எனவும், தற்போது தலைமறைவாக உள்ளார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

ANI தகவலின் படி., இச்சமவமானது கடந்த டிசம்பர் 6-ஆம் நாள் பெங்களூருவின் சதாசிவ நகரில் இடம்பெற்றுள்ளது. தன் தாயிடன் மதுபானம் குடிக்க பணம் கேட்ட உத்தண்ட் குமார், தாயார் பணம் கொடுக்காததால் ஆத்திரமடைந்து தீ வைத்து எரித்துள்ளார்.

சம்பவமறிந்து தன் மனைவினை காப்பாற்ற வந்த உத்தண்ட் குமாரின் தந்தை, பாதிக்கப்பட்ட பெண்மனியினை காப்பாற்றி அருகில் இருந்த மருத்துவமனையில் கொண்டு சேர்த்தார். கை, முகத்தில் தீ காயங்களுடன் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அப்பெண்மனி தற்போது அவசர சிகிச்சை பிரிவில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

மேலும் தாயை தீ வைத்து எரித்த உத்தண்ட் குமார் தற்போது தலைமறைவாகியுள்ள நிலையில் காவல்துறையினர் அவரை தேடி வருகின்றனர்.

முன்னதாக இதோப்போன்று விவகாரத்தில் பணம் கொடுக்காத தாயை, அவரது மகன் துடப்பத்தால் அடித்த சம்பவம் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

Trending News