மோடியை மீண்டும் பிரதமராக தேர்வு செய்ய வேண்டும்: சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங்

பிரதமர் மோடியை பாராட்டி பேசிய சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 13, 2019, 04:47 PM IST
மோடியை மீண்டும் பிரதமராக தேர்வு செய்ய வேண்டும்: சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் title=

மக்களவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று பேசிய சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங், பிரதமர் மோடியை பாராட்டி பேசினார். அவர் கூறியது, பிரதமர் மோடி எப்பொழுதும் நியாயமான வேலைகளைச் செய்திருக்கிறார். எப்போதும் நமக்கு உதவி செய்தார். என்னுடைய விருப்பம் நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் பதவிக்கு வர வேண்டும். அனைத்து மக்களவை உறுப்பினர்களும் மீண்டும் பிரதமராக மோடியை தேர்வு செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்றார். 

மேலும் முலாயம் சிங் கூறுகையில், பிரதமர் மோடியை அனைவருடனும் ஒருங்கிணைந்து செல்ல விருப்பப்பட்டார். நான் தெரிந்தவரை நரேந்திர மோடி அனைத்து தலைவர்களையும் கைகூப்பி வணங்கி மரியாதையை செலுத்துகிறார். இவ்வாறு பேசி பிரதமர் மோடியை வரவேற்றார். இந்த சுவாரஸ்யமான சம்பவத்தின்போது முலாயம் சிங்கிற்கு அடுத்தபடியாக உட்கார்ந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தியும் தனது மகிழ்ச்சியை சிரிப்பு மூலம் வெளிப்படுத்தினார்.

Trending News