பிரபல பர்கர் கடையின் பர்கரில் கண்ணாடித்துண்டுகள்! அதிர்ச்சி

புனேவில் உணவு கடை ஒன்றில் பர்கர் சாப்பிட்ட உணவில் இருந்த கண்ணாடித்துண்டுகள் தொண்டைக்குள் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Last Updated : May 21, 2019, 08:35 PM IST
பிரபல பர்கர் கடையின் பர்கரில் கண்ணாடித்துண்டுகள்! அதிர்ச்சி title=

புனேவில் உணவு கடை ஒன்றில் பர்கர் சாப்பிட்ட உணவில் இருந்த கண்ணாடித்துண்டுகள் தொண்டைக்குள் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மஹாராஷ்டிர மாநில புனேவில் சஜித் பதான் என்ற ஆட்டோ ஓட்டுநர், கடந்த சனிக்கிழமையன்று தனது நண்பர்களுடன், பிரபல பர்கர் கிங் கடைக்கு உணவருந்த சென்றுள்ளார். அங்கு சஜித் பதான் சாப்பிட பர்கரில் கண்ணாடித்துண்டுகள் இருந்துள்ளது. அதை கவனிக்காமல் சஜித் பதான் சாப்பிட்டுள்ளார். அந்த கண்ணாடி தூண்டானது சஜித் பதான் தொண்டைக்குள் சிக்கியத்தில் அவரது வாயிலிருது ரத்தம் கசிந்துள்ளது.

இதனால் அதிர்ந்து போன சக நண்பர்கள் அவர் சாப்பிட்ட பர்கரை ஆராய்ந்த போது அதில் சில உடைந்த கண்ணாடித்துண்டுகள் இருந்துள்ளன. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சைக்கு பின்னர் உடல் நலம் தேறியுள்ளார். இதனிடையே அவர் பர்கர் கிங் கடையின் மீது அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பர்கரில் கண்ணாடித்துண்டுகள் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending News