பஞ்சாயத்தில் பத்திரம்! அம்மனிடம் சிக்க போவது யார்? பஞ்சாயத்தில் வந்த தீர்ப்பு

Amudhavum Annalakshmiyum August 28 Update: அம்மனிடம் சிக்க போவது யார்? பஞ்சாயத்தில் வந்த தீர்ப்பு - அமுதாவும் அன்னலட்சுமியும் எபிசோட் அப்டேட் 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 28, 2023, 12:29 PM IST
பஞ்சாயத்தில் பத்திரம்! அம்மனிடம் சிக்க போவது யார்? பஞ்சாயத்தில் வந்த தீர்ப்பு title=

அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்: தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘அமுதாவும் அன்னலட்சுமியும்' சீரியல். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். 

இந்த சீரியலின் கடந்த வெள்ளி கிழமை எபிசோடில் அமுதாவுக்கு வீட்டை மீட்க 4 ஏக்கர் சொத்தின் டாகுமெண்ட் கிடைத்த நிலையில் குமரேசன் அதில் தனக்கும் பங்கு இருப்பதாக போலி டாகுமெண்ட்டை காட்டி ஷாக் கொடுத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 

பழனி குடும்பத்தினர் தங்களுக்கும் இந்த நிலம் தங்களுடையது என பத்திரத்தை நீட்ட, சேட்டு மாணிக்கத்திடம் முதல்ல உங்க பிரச்சனையை முடிச்சிட்டு வாங்க, அப்புறமா நிலத்தை நான் வாங்குறேன் என கிளம்பி செல்ல உமா அமுதாவிடம் உங்களை நல்லாவே இருக்க விட மாட்டோம் நாசமா போயிருவீங்க என திட்ட பழனி மாணிக்கத்திடம் எங்க பத்திரம் ஒரிஜினலான்னு கோர்ட்டுல வச்சு பார்த்துக்கலாம் என்று சவால் விட மாணிக்கம் கோர்ட்டுல கேசை போட்டு எங்களுக்கு பணம் கிடைக்க விடாம இழுத்தடிக்கனும்னு பார்க்குறீல்ல, அது நடக்கவே நடக்காது, நான் இப்பவே ஊர் பஞ்சாயத்தை கூட்டுறேன் என சொல்கிறார்.

அதனை தொடர்ந்து பஞ்சாயத்து கூட பஞ்சாயத்தார் இரு பத்திரங்களையும் பார்த்துவிட்டு ரெண்டும் ஒண்ணு போல தான் இருக்கு, இதுல யாரோ ஒருத்தருடையது போலி பத்திரம் தான்,  யாருடையது போலின்னு நீங்களே சொல்லிருங்க என்று சொல்ல மாணிக்கம் எங்க குடும்பத்தை பத்தி இந்த பஞ்சாயத்துக்கு நல்லாவே தெரியும், நாங்க தப்பு பண்ணிருப்போமா என எடுத்து சொல்ல பழனி அவங்களுக்கு தான் பணத் தேவை அதனால அவங்க தான் போலி பத்திரத்தை ரெடி பண்ணிருக்காங்க என சொல்கிறான். பஞ்சாயத்தார் இதுக்கு ஒரே தீர்வு தான், அம்மனுக்கு மிளகா அரைச்சி ரெண்டு குடும்பத்தாரும் பூசவேண்டும், யாரு தப்பு பண்ணாங்களோ அவங்க உடம்பு எரியும், அவங்க தான் தப்பு பண்ணவங்க என தீர்ப்பு சொல்கின்றனர். 

மேலும் படிக்க | ஒரு வழியா வெளியான அப்டேட்… அஜித்தின் விடாமுயற்சி குறித்து சூப்பர் தகவல்

பழனி வீட்டில் குமரேசனிடம் உலகமே டிஜிட்டல் மாயமாயிடுச்சு, இப்ப போய் கல்லுல மிளகா அரைச்சி பூசுனா உடம்பு எரியும்னு காமெடி பண்ணிகிட்டிருக்கீங்க..குமரேசன் அவனிடம் நீ கல்லுன்னு நினைக்கிற, அது எவ்வளவு சக்தி வாய்ந்த அம்மன்னு உனக்கு தெரியாது, அந்த அம்மன் என்ன செய்யுதுன்னு பார்ப்போம் என சொல்கிறான்.

அடுத்ததாக அன்னலட்சுமி அமுதாவிடம் இது உங்க மாமாவே நமக்கு இருக்குற இடத்தை காட்டுன பத்திரம், அதனால தைரியமா நீ அம்மனுக்கு மிளகா அரைச்சி பூசு அந்த அம்மனும் உங்க மாமாவும் கூட துணையா இருப்பாக என சொல்கிறாள். இரு குடும்பத்தாரும் கோவிலுக்கு வர அமுதாவும் உமாவும் மிளகாய் அரைத்து எடுத்து வருகின்றனர். 

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

அமுதாவும் அன்னலட்சுமியும்: சீரியலை எங்கு பார்ப்பது

அமுதவும் அன்னலட்சுமியும் சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.

மேலும் படிக்க | வசூல் ராஜாவான ஜெயிலர்.. ரூ.600 கோடியை தாண்டிய கலெக்ஷன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News