தூக்கிட்ட நிலையில் இளம் நடிகை மரணம்..! கொலையா? தற்கொலையா? ரசிகர்கள் அதிர்ச்சி!

Aparna Nair Suicide: கேரளாவை சேர்ந்த நடிகை அபர்ணா நாயர், அவரது வீட்டில் தூக்கிட்ட நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.   

Written by - Yuvashree | Last Updated : Sep 1, 2023, 01:24 PM IST
  • மலையாள திரையுலகை சேர்ந்த பிரபல நடிகை, அபர்ணா நாயர்.
  • இவர், நேற்று தூக்கிட்ட நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
  • இவர் மரணத்திற்கு காரணம் என்ன..? ரசிகர்கள் அதிர்ச்சி!
தூக்கிட்ட நிலையில் இளம் நடிகை மரணம்..! கொலையா? தற்கொலையா? ரசிகர்கள் அதிர்ச்சி!  title=

மலையாள நடிகை: கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தை சேர்ந்த நடிகை அபர்ணா நாயர். இவர், நேற்று தனது வீட்டில் தூக்கிட்ட நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். 

நடிகை மரணம்:

மெகாதீர்த்தம், பியூட்டிஃபுல், ரன் பேபி ரன், ஹோட்டல் கலிஃபோர்னியா, செகண்ட்ஸ் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்து பிரபலமானவர், அபர்ணா நாயர். இவர், பல மலையாள படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் பங்கு பெற்றுள்ளார். இவருக்கு 31 வயது ஆகிறது. ஆகஸ்டு 8ஆம் தேதியான நேற்று இரவு 7:30 மணியளவில் இவர் தன் வீட்டில் தூக்கிட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தின் போது அபர்ணா நாயரின் தாயார் மற்றும் சகோதரி ஆகியோர் இருவரும் வீட்டில் இருந்துள்ளனர்.  அபர்ணாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், இவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

மேலும் படிக்க | டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம் இன்று ஓடிடியில் வெளியீடு..! எந்த தளத்தில் எப்படி பார்ப்பது..?

Aparna Nair

காரணம் என்ன..? 

அபர்ணாவின் மரணத்திற்கான காரணங்கள் என்ன என்பது குறித்த தகவல்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். அவரது உடல் பிரேத பரிசோதனை செய்து முடித்த பிறகு எதுவும் முழுமையாக தெரிவிக்கப்படும் என்று போலீஸார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அபர்ணாவின் மரணம் குறித்து அவரது உறவினர்கள் மற்றும் குடும்பத்தாரிடம் போலீஸார் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது. 

இன்ஸ்டாகிராமில் பதிவுகள்:

அபர்ணாவின் உயிரிழப்பு மலையாள திரையுலக ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ள்து. காரணம், அவர் தனது சமூக வலைதள பக்கங்களில் தனது குடும்பத்தினருடன் உள்ள பல மகிழ்ச்சியான தருணங்களை புகைப்படஞ்களாக பதிவிட்டுள்ளார். இவர், தற்கொலை எண்னங்களுடன் இருந்தார் என்பது யாருக்கும் வெளியில் தெரியவில்லை என்றும் ரசிகர்கள் கருத்துக்களை பரிமாறி வருகின்றனர். 

குழந்தை மற்றும் கணவருக்காக போஸ்ட்:

மரணமடைந்த நடிகை அபர்ணாவிற்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.  தான் உயிரிழப்பதற்கு 22 மணி நேரத்திற்கு முன்னர், அவர் தனது இளையமகளின் புகைப்படங்கள் அடங்கிய வீடியோவை வெளியிட்டுள்ளார். அதனுடன் “என் உன்னி விளையாட்டு பிள்ளை..” என்ற கேப்ஷனையும் இணைத்துள்ளார். சில நாட்களுக்கு முன்னர் தந்து கணவருடன் எடுத்த புகைபப்டத்தையும் அபர்ணா பதிவிட்டிருந்தார். “என்னுடைய பலம்..” என்று அவரது கணவரை குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவுகளில் தற்போது ரசிகர்கள் பலர் R.I.P என கமெண்ட் செய்து வருகின்றனர். 

மேலும் படிக்க | கம்-பேக் கொடுத்தாரா சமந்தா..? ‘குஷி’ படம் எப்படி? ட்விட்டர் விமர்சனம் இதாே..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News