அட! ஐஸ்வர்யா மேனனா இது? வாய்பிளக்கும் நெட்டிசன்கள்!

நடிகை ஐஸ்வர்யா மேனன் தெலுங்கில் வரிசையாக மூன்று படங்களில் ஒப்பந்தமாகி படுபிஸியான நடிகையாக மாறிவிட்டார்.  

Written by - RK Spark | Last Updated : Apr 9, 2022, 10:03 PM IST
  • ஐஸ்வர்யா மேனன் தெலுங்கில் 3 படங்களில் நடிக்க உள்ளார்.
  • இவரது பழைய புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
  • நான் சிரித்தால் படத்திற்கு பிறகு பெரிதும் பேசப்பட்டார்.
அட! ஐஸ்வர்யா மேனனா இது? வாய்பிளக்கும் நெட்டிசன்கள்! title=

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழி படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நன்கு பரிட்சயமானவர் ஐஸ்வர்யா மேனன்.  காதலில் சொதப்புவது எப்படி திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிப்பு திறமையினால் தற்போது கதாநாயகியாக உயர்ந்துள்ளார்.  தமிழில் 'தமிழ் படம்-2' மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர், பின்னர் 'நான் சிரித்தால்' படத்தில் நடித்திருந்தார்.  அதேபோல 2012ம் ஆண்டு வெளியான 'லவ் பெயிலியர்' படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகிற்குள் நுழைந்த இவருக்கு தொடர்ச்சியாக தெலுங்கிலேயே மூன்று திரைப்பட வாய்ப்புகள் கிடைத்துள்ளது.

மேலும் படிக்க | மாஸ் காட்டும் அடுத்த அப்டேட்!- ரியல் ‘Beast mode’ ஸ்டார்ட்!

சாஹோ மற்றும் ராதே ஷியாம் போன்ற திரைப்படங்களை தயாரித்த யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.  ஆர்எக்ஸ் 100 மற்றும் வலிமை படத்தின் மூலம் அதிக வரவேற்பை பெற்ற கார்த்திகேயா கும்மகொண்டா இப்படத்தில் கதாநாயகனாக நடிக்க, பிரசாந்தை ரெட்டி இப்படத்தை இயக்குகிறார்.  இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் தனிகெல்லா பரணி, ரவிசங்கர் மற்றும் ஷரத் லோஹிதாஸ்வா போன்றோர் நடிப்பார்கள் என்று கூறப்படுகிறது.

அதனைத்தொடர்ந்து கேரி பிஎச் இயக்கத்தில், நிகில் சித்தார்த்தா நடிக்கும் புதிய படத்தில் நடிகை ஐஸ்வர்யா மேனன் ஒப்பந்தமாகியுள்ளார்.  இந்த ஸ்பை த்ரில்லர் படத்தின் அதிகாரபூர்வ தலைப்பை விரைவில் படக்குழு அறிவிக்கவுள்ளது.  நடிகர் நிகில் அவர் நடித்துள்ள '18 பக்கங்கள்' திரைப்படத்தின் வெளியீட்டிற்காக காத்துக்கொண்டிருக்கிறார்.  அடுத்ததாக நடிகை ஐஸ்வர்யா மேனன் மூன்றாவதாக தெலுங்கு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார், இப்படம் குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

aiswarya

பல படங்களில் சிறு சிறு வேடங்களிலும், ஒரு சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்திருக்கும் ஐஸ்வர்யா மேனன் தற்போது படுபிஸியான நடிகையாக மாறிவிட்டார்.  இந்நிலையில் இவரது பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி ரசிகர்களை வியக்க செய்திருக்கிறது.  2014ம் ஆண்டு முரளி இயக்கத்தில், கோமல் குமார் நடிப்பில் வெளியான 'நமோ பூதாத்மா' என்கிற  திகில் படத்தில் ஐஸ்வர்யா மேனன் கதாநாயகியாக நடித்திருந்தார், அப்படத்தின் ஆடியோ வெளியீட்டில் கலந்துகொண்ட அவரது புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.  அந்த பழைய புகைப்படத்திற்கும் இப்போதுள்ள புகைப்படத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது, இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இது உண்மையில் ஐஸ்வர்யா மேனன் தானா? என்று குழம்பி வருகின்றனர்.

மேலும் படிக்க | பீஸ்ட் Girl-ன் காஸ்டிலி போட்டோஸ் - பூஜா ஹெக்டே லேட்டஸ்ட்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News