கார்த்திகை தீபம்: செம டிவிஸ்ட்..! தீபா கழுத்தில் தாலி கட்டியது யார் தெரியுமா? நட்சத்திரா அதிர்ச்சி

கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடில் செம டிவிஸ்ட் ஏற்பட இருக்கிறது. தீபா கழுத்தில் கார்த்தி தாலி கட்ட, அதற்கு அடுத்து நடக்கப்போகும் சம்பவங்கள் தான் செம ஹைலைட்.   

Written by - S.Karthikeyan | Last Updated : May 17, 2023, 04:32 PM IST
  • கார்த்திகை தீபம் சீரியல் இன்றைய எபிசோட்
  • தீபா கழுத்தில் தாலி கட்டிய கார்த்தி
  • நேரில் பார்த்த நக்ஷத்திராவுக்கு அதிர்ச்சி

Trending Photos

கார்த்திகை தீபம்: செம டிவிஸ்ட்..! தீபா கழுத்தில் தாலி கட்டியது யார் தெரியுமா? நட்சத்திரா அதிர்ச்சி title=

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் கார்த்திகை தீபம் சீரியலில் அடுத்த டிவிஸ்ட் அரங்கேற இருக்கிறது. தீபா கழுத்தில் கார்த்தி தாலி கட்டிவிட, அடுத்து நட்சத்திராவால் இன்னொரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேற இருக்கிறது. அது என்ன? என்பது தான் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது. 

தாலியை கழட்டி வைத்த தீபா

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.45 மணிக்கு பிரபலமான சீரியலான கார்த்திகை தீபம் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் இந்த சீரியலின் இன்றைய எபிசோடில், தீபா கழட்டி வைத்த தாலியை அபிராமி ஆசிர்வாதம் செய்து சாமியை வேண்டி கொடுக்கிறாள். அந்த தாலியுடன் கார்த்திக் மண்டபத்துக்கு வருகிறான். மறுப்பக்கம் நட்சத்திராவும் குடோனில் இருந்து ஒரு வழியாக தப்பித்து மண்டபத்தை நோக்கி வருகிறாள். 

மேலும் படிக்க | அஜித்-ரஜினிக்கு பாடல் எழுத யார் காரணம்? பிச்சைக்காரன் 2 பாடலாசிரியர் அருண் பாரதி பளிச் பேட்டி!

சிவாவின் திட்டமாக இருக்குமோ?

இன்னொரு புறம் தீபாவின் டூப்ளிகேட் மாப்பிள்ளையின் அப்பா, தீபா எங்கே? என தர்மலிங்கத்திடம் கேட்கிறார். அவர், ராஜு தம்பி பியூட்டி பார்லர் கூட்டி சென்றிருப்பதாக சொல்கிறார். உடனே அவர்களுக்கு இது சிவாவின் திட்டமாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது.

மண்டபத்துக்கு வரும் கார்த்திக் 

இதனையடுத்து மண்டபத்துக்கு வந்த கார்த்திக் மணமேடை ஏறி அபிராமி கொடுத்த தாலியை கொடுக்கிறார். ஆனால், அங்கிருக்கும் அய்யர் இங்கதான் தங்க தாலி இருக்கே?... அப்புறம் இது எதுக்கு? என கேட்கிறார். அவருக்கு பதில் கொடுக்கும் கார்த்தி, இது அம்மா ஆசிர்வாதம் செய்து கொடுத்த தாலி, நான் இதை தான் கட்டுவேன் என சொல்லி தங்கத்தில் இருக்கும் தாலியை மாற்றுகிறான். 

தீபாவுக்கு தாலி கட்டும் கார்த்தி 

அதன்பிறகு, கெட்டி மேளம் முழங்க தீபா என தெரியாமல் அவள் கழுத்தில் தாலியை கட்டுகிறான் கார்த்திக். இந்தசமயம் நட்சத்திரா மண்டபத்துக்கு வர கார்த்திக் உட்பட அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இதனைதொடர்ந்து கார்த்திக் தீபாவின் முகத்திரையை விலக்க போகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கபோவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணதவறாதீர்கள்.

மேலும் படிக்க | மீனாட்சி பொண்ணுங்க அப்டேட்: வெற்றியின் மாலையை கழட்ட சக்தி போட்ட திட்டம் பலித்ததா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News