மேற்குவங்க ராமகிருஷ்ண மட தலைவரிடம் ஆசி பெற்ற ரஜினிகாந்த்!!

மேற்குவங்க ராமகிருஷ்ணர் மடத்தின் தலைவர் ஸ்மரனாநந்தா மகராஜை சந்தித்து ஆசி பெற்றார் நடிகர் ரஜினிகாந்த்! 

Last Updated : Jul 11, 2018, 04:43 PM IST
மேற்குவங்க ராமகிருஷ்ண மட தலைவரிடம் ஆசி பெற்ற ரஜினிகாந்த்!! title=

மேற்குவங்க ராமகிருஷ்ணர் மடத்தின் தலைவர் ஸ்மரனாநந்தா மகராஜை சந்தித்து ஆசி பெற்றார் நடிகர் ரஜினிகாந்த்! 

கடந்த 2010-ல் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகம் தான் 2Point0. இப்படம் சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக எமிஜாக்சன் மற்றும் வில்லனாக ஹிந்தி நடிகர் அக்‌ஷய்குமார் நடித்துள்ளனர்.

இதை தொடர்ந்து, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ரஜினியின் புதிய படத்திற்கான முதல்கட்ட படப்பிடிப்பு மேற்கு வங்க மாநிலம், டார்ஜிலிங் பகுதியல் நடைபெற்று வருகிறது. கடந்த ஜூன் மாதம் 7 ஆம் தேதி இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது.

இதையடுத்து, இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் அடுத்தகட்டமாக மதுரை மற்றும் இமயமலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. எனவே இரண்டு நாட்கள் ஓய்வுக்காக சென்னை திரும்ப ரஜினிகாந்த் முடிவு செய்தார்.

இதை தொடர்ந்து, வருகின்ற நவம்பர் மாதம் 29 ஆம் தேதி வெளியிட இருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்ற நிலையில் மேற்குவங்க ராமகிருஷ்ணர் மடத்தின் தலைவர் ஸ்மரனாநந்தா மகராஜை சந்தித்து ஆசி பெற்றார் நடிகர் ரஜினிகாந்த்.

முன்னதாக, பேலூரிலுள்ள ராமகிருஷ்ணர் மடத்திற்கு சென்ற ரஜினிகாந்த் தியானத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து, அந்த மடத்தின் தலைவர் ஸ்மரனாநந்தா மகராஜை சந்தித்து ஆசிபெற்றார். பின்னர் விமானம் மூலமாக ரஜினிகாந்த் சென்னை வந்தடைந்தார்.

 

Trending News