5-0 கணக்கில் தொடரை வெல்ல வாய்ப்பு குறைவு- கங்குலி

Last Updated : Sep 14, 2017, 09:26 AM IST
5-0 கணக்கில் தொடரை வெல்ல வாய்ப்பு குறைவு- கங்குலி  title=

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:- 

இந்திய அணியை உள்ளூரில் மிக வீழ்த்துவது கடினமானது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்தியா கண்டிப்பாக கைப்பற்றும். ஆனால் 5-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக வெல்வதற்குரிய வாய்ப்பு குறைவு. 

ஏனெனில் ஆஸ்திரேலியா வலுவான அணி. நமது தேர்வாளர்கள் இளம் வீரர்களின் திறமையை பரிசோதிக்க விரும்புகிறார்கள். 

2019-ம் ஆண்டு உலக கோப்பையை கருத்தில் கொண்டு தேர்வாளர்கள் மேற்கொள்ளும் இந்த முயற்சி பாராட்டுக்குரியது. 

உலக கோப்பைக்கு தயாராவதற்கு போதுமான காலஅவகாசம் உள்ளது. அணியை வலுப்படுத்த ஒவ்வொருவருக்கும் வாய்ப்பு கொடுப்பது அவசியமாகும். இவ்வாறு அவர் பேட்டி அளித்தார்.

Trending News