IPL 2019: டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்து வீச்சு தேர்வு

இன்று நடைபெறும் போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்ய இரண்டு அணிகளும் தயாராகி வருவதால், கடும் போட்டி இருக்கும்நிலையில், ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 2, 2019, 08:42 PM IST
IPL 2019: டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்து வீச்சு தேர்வு title=

19:40 02-04-2019
இன்று நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி டாஸ் வென்றது. அந்த அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

 

 


ஐபிஎல் தொடரின் 12வது சீசன் கடந்த 23 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரின் 13-வது லீக் ஆட்டம் நேற்று முடிந்தது. இன்று நடைபெற உள்ள 14வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் மற்றும் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.

இன்று நடைபெற உள்ள டி-20 லீக் ஆட்டம் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு ஆரம்பமாகும். ராஜஸ்தான் - பெங்களூர் இரு அணிகளும் விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது. புள்ளிப்பட்டியலில் கடைசி இரண்டு இடத்தில் இரண்டு அணிகளும் உள்ளன. 

எனவே இன்றைய போட்டியில் ஏதாவது ஒரு அணிக்கு வெற்றியோ, தோல்வியோ நிச்சயம் இருக்கும். ராஜஸ்தான் - பெங்களூர் இரு அணிகளில், ஒரு அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்ய காத்திருக்கிறது. 

ராஜஸ்தான் அணியை பொறுத்த வரை பஞ்சாப், ஹைதராபாத் மற்றும் சென்னை அணியிடம் தோல்வியை தழுவியுள்ளது. அணியின் கேப்டன் ரஹானே, பட்லர், சஞ்சு சாம்சன் நன்றாக ஆடி வருகின்றனர். அதேபோல பெங்களூர் அணி சென்னை, மும்பை மற்றும் ஹைதராபாத் அணியிடம் தோல்வியை தழுவியுள்ளது. இந்த அணியில் விராட் கோலி மற்றும் டி வில்லியர்ஸ் மட்டும் நல்ல பார்மில் உள்ளனர். 

இன்று நடைபெறும் போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்ய இரண்டு அணிகளும் தயாராகி வருவதால், இன்றைய ஆட்டத்தில் கடும் போட்டி இருக்கும் நிலையில், ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

Trending News