பட்டாசு ஆலை வெடி விபத்து: 3 தொழிலாளி பரிதாப பலி....

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 3 தொழிலாளர்கள் பலி....

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 8, 2018, 12:10 PM IST
பட்டாசு ஆலை வெடி விபத்து: 3 தொழிலாளி பரிதாப பலி.... title=

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 3 தொழிலாளர்கள் பலி....

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகில் காக்கிவாடன்பட்டி என்ற கிராமத்திற்க்கு அருகே செயல்பட்டுவந்த பட்டாசு ஆலையில் இன்று காலை வெடிமருந்து உராய்வு காரணமாக திடீர் என தீ பற்றியது. இதையடுத்து, விபத்து ஏற்பட்டதையடுத்து தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த விபத்தில் 3 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், இவ்விபத்தில் காயமடைந்த இருவரை அரிக்குள் உள்ள அரசு மருத்துமவனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். 

தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும், விபத்து எவ்வாறு நடந்தது? பட்டாசு ஆலையில் விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படுகிறதா? என்பது குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Trending News