தமிழகத்தின் அடுத்த டிஜிபி யார்? கமிஷனர் ரகசிய டெல்லி பயணம்

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இருக்கும் சைலேந்திர பாபு விரைவில் ஓய்வு பெற இருக்கும் நிலையில், அடுத்த டிஜிபி யார்? என்பதற்கு கடும் போட்டி நிலவுகிறது. இது தொடர்பாக சென்னை கமிஷ்னர் சங்கர் ஜிவால் டெல்லிக்கு ரகசிய பயணம் செய்துள்ளாராம்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 26, 2023, 10:36 AM IST

Trending Photos

தமிழகத்தின் அடுத்த டிஜிபி யார்? கமிஷனர் ரகசிய டெல்லி பயணம் title=

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக உள்ள சைலேந்திர பாபுவின் பதவிக்காலம் வரும் ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது. இதனால் அடுத்த டிஜிபி யார் என்ற அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்தபோது தமிழகத்தின் டிஜிபியாக திரிபாதி இருந்தார். அவரது பதவிக்காலம் முடிவடையவிருந்த நிலையில் அடுத்த டிஜிபியாக சைலேந்திர பாபுவை திமுக அரசு தேர்வு செய்தது. இதையடுத்து சைலேந்திர பாபு கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பொறுப்பேற்றுக் கொண்டார். 2023 ஜூன் மாதம் சைலேந்திர பாபு ஓய்வு பெற உள்ளார். இதனால் டிஜிபியை பதவியை பிடிக்க காவல்துறையில் கடும் போட்டி நிலவி வருகிறது. 

மேலும் படிக்க | வழக்கறிஞர்களுக்கு தொழிலில் பக்தி வேண்டும் - நீதிபதி சுப்பிரமணியன்!

உயர் பதவிகளை வகிப்போர் ஓய்வு பெறுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே சீனியாரிட்டி அடிப்படையில் அடுத்து அந்த பதவிக்கு யாரை கொண்டு வரலாம் என்பதை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அந்தந்த மாநில அரசு அனுப்பி வைக்கும். அது போல் சைலேந்திர பாபு ஓய்வு பெறுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர், அதாவது வரும் மே மாதம் பதவி மூப்பு அடிப்படையில் 3 பேரை தமிழக அரசு தேர்வு செய்து மத்திய உள்துறைக்கு அனுப்பி வைக்கும். அந்த 3 பேரில் ஒருவரை மத்திய உள்துறையே தேர்வு செய்து அவரை அந்த பதவிக்கு அமர்த்தலாம் என தமிழக அரசை அறிவுறுத்தும். இல்லாவிட்டால் அந்த 3 பேரில் யாராவது ஒருவரை தமிழக அரசே தேர்வு செய்து கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துவிடும். 

சென்னை காவல் துறை கமிஷனராக உள்ள சங்கர் ஜிவால், முன்னாள் கமிஷனரும் காவலர் வீட்டு வசதி வாரிய மேலாண் இயக்குநர் ஏ.கே.விஸ்வநாத், ஊர்க் காவல் படை தலைவராக உள்ள பிரஜ் கிஷோர் ரவி (பி.கே.ரவி) ஆகிய மூவரின் பெயர்களை பரிந்துரைக்கும் என தெரிகிறது. இந்த நிலையில் தான் பிப்25-ம் தேதி சென்னை கமிஷனர் சங்கர் ஜிவால் டெல்லி சென்று, அங்கு மத்திய பாதுகாப்புதுறை செயலாளர் அஜய் தோவல், சங்கர் ஜிவால் சந்தித்து பேசியுள்ளராம். இருவரும் உத்தரகண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள், சென்னை கமிஷனராக சங்கர் ஜிவால் நியமிக்க அஜய் தோவல் தான் பரிந்துரை செய்தார். அதே போன்று அடுத்த டிஜிபி நியமனம் தொடர்பாக பரிந்துரை செய்ய வேண்டுமென அஜய் தோவலை சந்தித்து சங்கர் ஜிவால் கோரிக்கை வைத்துள்ளதாகவும் தகவல்.

மேலும் படிக்க | ஈரோடு இடைத்தேர்தல்: உரிமைத் தொகை அறிவிப்பு வெளியிடலாமா? முதலமைச்சர் மீது அதிமுக புகார்

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News