Ajith Kumar Movie After Good Bad Ugly : கோலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித்குமார், சமீபத்தின் விடாமுயற்சி படத்தின் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஓர் அளவிற்கு வரவேற்பு பெற்றுள்ளது தொடர்ந்து, இவரது அடுத்த படத்தை இயக்க இருப்பது யார் என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஒரே ஆண்டில் இரண்டு படங்கள் ரிலீஸ்..
தமிழ் சினிமாவை பொருத்தவரை பெரிய ஹீரோக்களின் படங்கள், ஒரு ஆண்டிற்கு ஒன்றுதான் வெளியாகி இருக்கிறது. விஜய், ரஜினி உள்ளிட்ட பெரிய நடிகர்கள் அதைதான் பின்பற்றி வருகின்றனர். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அஜித்தின் படம் எதுவும் வெளியாகவில்லை. இதையடுத்து பெரும் ஆரவாரத்துடன் நிலையான விடாமுயற்சி படித்திருக்கும் கலவையான விமர்சனங்களே வந்திருக்கின்றன. பொங்கலுக்கு வெளியாவதாக கூறப்பட்டு கடைசியில் இம்மாதம் 6ஆம் தேதிதான் இப்படம் வெளியானது.
விடாமுயற்சி படத்திற்கு பிறகு அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் ரிலீசிற்கு ரெடியாக காத்துக் கொண்டுள்ளது. இந்த படத்தை ஆதி குருவி சந்திரன் இயக்கியிருக்கிறார். பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே வருடத்தில் அஜித்தின் இரண்டு படங்கள் வெளியாவது இதுவே முதன்முறையாகும். குட் பேட் அத்தி திரைப்படம், வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த இயக்குனர் யார்?
அஜித் அடுத்து நடிக்க இருப்போம் படம் மீதும் அந்த இயக்க இருக்கும் இயக்குனர் மீதும் எதிர்பார்ப்புகள் அதிகமாகி உள்ளது. காரணம், இனி அஜித்திற்கு போட்டி நடிகர் கருதப்பட்ட விஜய் நடிக்கப்போவதில்லை. கலெக்ஷன் பார்க்க வேண்டும் என்றால், அஜித் அல்லது ரஜினி ஆகிய இரண்டு பெரிய கைகள்தான் இருக்கின்றன. எனவே அஜித் அடுத்த யாரிடம் கைகோர்க்கப் போகிறார் என்பது குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.
ஒரு பக்கம் அஜித்தும் சிவாவும் மீண்டும் கைகோர்க்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால் கங்குவா படத்திற்கு பிறகு அப்படியே சைலண்டாக இருக்கும் சிவாவின் கவனம் வேறொரு நடிகர் மேல் திரும்பி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அசித்திற்கு இரண்டு இயக்குனர்கள் கதை சொல்லி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
யார் அந்த இரண்டு இயக்குனர்கள்?
அஜித்திற்கு கதை சொன்ன இரண்டு இயக்குனர்களுள் ஒருவர், இயக்குனர் நித்திலன். இவர் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த மகாராஜா படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இதையடுத்து இவர் தன் படத்தை இயக்க வேண்டுமென பல நடிகர்கள் காத்துக் கொண்டுள்ளதாக குறிப்பிடுகிறது. இந்த நிலையில் இவர் நட்சத்திரம் ஒரு கதை சொல்லி இருப்பதற்கும் அதை அஜித் பரிசளித்து வருவதாகவும் சினிமா வட்டாரங்களில் கிசு கிசுக்கப்படுகிறது.
நிதிலனை போலவே அஜித்திடம் அதை சொல்லி இருக்கும் இன்னொரு இயக்குனர், விக்னேஷ் ராஜா. இவர் இயக்கத்தில் 2023-ல் வெளியான போர் தொழில் திரைப்படம், பெரிய வெற்றி பெற்றது. இவரிடம் இருக்கும் ஒரு வேகமான திரில்லர் திரைக்கதையை இவர் அஜித்திடம் சொன்னதாகவும் அஜித் இதையும் கேட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இவைகள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை
மேலும் படிக்க | அஜித்திற்கு தோல்வியை தேடித்தந்த பிப்ரவரி ரிலீஸ் படங்கள்! விடாமுயற்சி அவ்ளோ தானா?
மேலும் படிக்க | அச்சு அசல் அஜித்தின் ஜெராக்ஸாக இருக்கும் அவரது தம்பி! வைரல் புகைப்படங்கள்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ