காதல் மனைவியுடன் கணவர் தற்கொலை: பதற வைக்கும் பகீர் பின்னணி

ஒசூர் அருகே நிறைமாத காதல் மனைவியுடன் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் தற்கொலை செய்துகொள்ள என்ன காரணம்? 

Written by - Bhuvaneshwari P S | Last Updated : Apr 20, 2024, 12:49 PM IST
  • ஆன்லைன் டிரேடிங்கில் பணம் இழந்தது தான் இவர்கள் தற்கொலைக்கு காரணமா?
  • கந்துவட்டிக்கு பணம் வாங்கினார்களா?
  • யாராவது மிரட்டினார்களா?
காதல் மனைவியுடன் கணவர் தற்கொலை: பதற வைக்கும் பகீர் பின்னணி title=

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த பேகேப்பள்ளி பகுதியை சேர்த்தவர் விஜயகுமார். 27 வயதாகும் இவர் கடந்தாண்டு தனது காதலி சந்தியாவை  இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். திருமணம் ஆன சில மாதங்களில் சந்தியா கர்ப்பமாகியுள்ளார். நாளை சந்தியாவுக்கு பிரசவ வலி வரலாம் எனவும், குழந்தையும் அன்றே பிறந்துவிடலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இரண்டு குடும்பத்தினரும் புதுவரவை வரவேற்க ஆவலாய் இருந்துள்ளனர். ஆனால் எதிரிக்கு கூட இதுப்போன்ற நிலை வரக்கூடாது என நினைக்கும் வகையில் இந்த சோக சம்பவம் அரங்கேறி உள்ளது. 

தனியார் நிறுவனத்தில் விஜயகுமார் வேலை பார்த்து வந்த நிலையில், ஆன்லைன் டிரேடிங்கில் பணம் முதலீடு செய்து பல லட்சம் ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளார். அவர் கடன் வாங்கி பல லட்சம் டிரேடிங்கில் முதலீடு செய்துள்ளார். ஆனால் தொடர்ந்து போட்ட பணம் எல்லாவற்றையும் இழந்துள்ளார். இந்த சூழலில் கடந்த வியாழக்கிழமை இரவு கணவன், மனைவி இருவரும் சாப்பிட்டு விட்டு தூங்க சென்ற நிலையில், நேற்று காலை வெகு நேரமாகியும் கதவை திறக்காமல் இருந்துள்ளனர். 

நேற்று வாக்களிக்கும் நாள் என்பதால் அலுலவகம் விடுமுறை. அதனால் இருவரும் நன்றாக தூங்குவதாக குடும்பத்தினர் நினைத்துள்ளனர். ஆனால் மதியம் வரை ஆனதால் கதவை தட்டி பார்த்துள்ளனர். ஆனால் கதவு திறக்கப்படாததால், வீட்டிலிருந்தவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது விஜயகுமாரும், சந்தியாவும் தங்கள் படுக்கையறையில் உள்ள மின்விசிறியில் ஒரே கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதை கண்டு குடும்பத்தினர் கதறி அழுதுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

மேலும் படிக்க | விஜய் மீது சென்னை கமிஷனரிடம் புகார்... கொந்தளித்த சமூக ஆர்வலர் - என்ன விஷயம்?

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆன்லைன் டிரேடிங்கில் பணம் இழந்தது தான் இவர்கள் தற்கொலைக்கு காரணமா? கந்துவட்டிக்கு பணம் வாங்கினார்களா? யாராவது மிரட்டினார்களா? என பல்வேறு கோணங்களில் சிப்காட் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

குழந்தை பிறக்க இரு தினங்களே இருந்த நிலையில், நிறைமாத கர்ப்பிணியும், அவரது கணவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினரிடையே கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரச்சனை இல்லாத மனிதன் என உலகில் யாரும் இல்லை. பிரச்சனைகள் வரும்போது அவற்றை தீர்க்க வழிகாண வெண்டுமே தவிர, நம்மை தோர்த்துக்கொள்ள நினைக்கக்கூடாது. எந்த பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது!!

உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற கீழ்காணும் எண்ணை தொடர்பு கொள்ளவும். மாநில உதவிமையம்: 104

மேலும் படிக்க | தமிழ்நாட்டில் மொத்த வாக்குப்பதிவு எவ்வளவு...? சென்னையில் சாதனையா? - முழு விவரம் உள்ளே!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

Trending News