அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு

வழக்கை விசாரித்து வரும் நீதிபதி செல்வம் இன்று விடுப்பில் சென்றுள்ளதால் மாவட்ட நீதிபதி பொறுப்பு சுவாமிநாதன் வழக்கை விசாரணை செய்தார். 

Written by - JAFFER MOHAIDEEN | Last Updated : Mar 8, 2024, 01:27 PM IST
  • அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு,
  • வழக்கு விசாரணைக்கு அமைச்சர் தரப்பினர் மற்றும் அமலாக்கத்துறை வழக்கறிஞர் என இரு தரப்பினரும் ஆஜராகவில்லை.
  • வழக்கு விசாரணை வரும் மார்ச் 22ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு title=

தூத்துக்குடி: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான  சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பு மற்றும் அமலாக்கதுறை தரப்பு வழக்கறிஞர் என இரு தரப்பினரும் வழக்கு விசாரணைக்கு இன்று மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகாததை தொடர்ந்து வழக்கு விசாரணையை வருகிற  மார்ச்22 ம் தேதிக்கு ஒத்திவைத்து மாவட்ட நீதிபதி  உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2006ஆம் ஆண்டு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வருமானத்திற்கு அதிகமாக நான்கு கோடியே 90 லட்சம் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது மனைவி, மகன்கள், சகோதரர்கள் உள்பட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு 14.05.2001 முதல் 31.03.2006 வரையிலான காலகட்டத்தில் அனிதா  மற்றும் அவர் குடும்ப உறுப்பினர்களின்  பெயரில் வாங்கப்பட்ட ரூ.6.50 கோடி மதிப்புள்ள 160 ஏக்கர் நிலம் உள்ளிட்ட 18 சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.

இந்த வழக்கை தூத்துக்குடி முதன்மை மாவட்ட நீதிமன்ற நீதிபதி செல்வம் விசாரணை நடத்தி வருகிறார். 

மேலும் படிக்க | எடப்பாடி பழனிச்சாமி ஓட்டுக்காக ஆள் வைத்து கொலை செய்தவர் - கோவை செல்வராஜ்

இவ்வழக்கில் தங்களையும் இணைக்க கோரி அமலாக்கத்துறை மனு செய்துள்ளது. இதன் காரணமாக இந்த வழக்கு மீண்டும் சூடு பிடித்தது. இந்நிலையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான  சொத்து குவிப்பு வழக்கு தூத்துக்குடி மாவட்டத்தை நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது , 

இவ்வழக்கை விசாரித்து வரும் நீதிபதி செல்வம் இன்று விடுப்பில் சென்றுள்ளதால் மாவட்ட நீதிபதி பொறுப்பு சுவாமிநாதன் வழக்கை விசாரணை செய்தார். வழக்கு விசாரணைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பினர் மற்றும் அமலாக்கத்துறை வழக்கறிஞர் என இரு தரப்பினரும் ஆஜராகததால் வழக்கு விசாரணையை வரும் மார்ச் 22ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

மேலும் படிக்க | உதயநிதி ஸ்டாலினை ஏமாற்றிய அதிகாரிகள்? அமைச்சருக்கே இந்த நிலைமையா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News