ஆவின் முறைகேடு: ரூ.10.37 கோடி ஊழல்; முக்கிய கோப்புகள் மாயம்

ஆவினில் கடந்த காலங்களில் விளம்பரம் செய்ததில் ரூ.10.37 கோடி ஊழல் நடைபெற்றதும், அது தொடர்புடைய ஆவணங்கள் அழிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 28, 2021, 08:23 AM IST
ஆவின் முறைகேடு: ரூ.10.37 கோடி ஊழல்; முக்கிய கோப்புகள் மாயம் title=

கடந்த 10 ஆண்டுகளாக  தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனமான ஆவினில் பல்வேறு முறைகேடுகள் நடந்து இருப்பதாக குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்து வருகிறது.

இந்தநிலையில், தற்போது திமுக (DMK) ஆட்சி வந்த பிறகு பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் (SM Nasar) தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆவின் நிறுவனங்களில் (Aavin) ஆய்வு மேற்கொண்டார். தொடந்த நடந்த ஆய்வில் ஆவின் நிறுவனங்களில் நடைபெற்ற முறைகேடுகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். 

ALSO READ | இதக்கூட விட்டு வைக்காம வீட்டுக்கு எடுத்துட்டு போனாரு: ராஜேந்திர பாலாஜியை சாடிய எஸ்.எம். நாசர்

அதன்படி பல்வேறு நடவடிக்கைகளில் ஊழல் நடந்துள்ளதாக தொடர்ந்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் ஊழலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆவின் வர்த்தகப் பிரிவு பொது மேலாளர்கள் உள்ளிட்ட 34 முக்கிய அதிகாரிகளை இடமாற்றம் செய்து ஆவின் நிர்வாக இயக்குனர் கந்தசாமி உத்தரவு பிறப்பித்தார். 

இந்நிலையில் ஆவினுக்கு விளம்பரம் செய்ததில், ரூ.10.37 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றுள்ளது. இதுதொடர்புடைய கோப்புகள் மாயமாகி உள்ளது தெரிய வந்துள்ளது. ரூ.10.37 கோடியில் ரூ.4.44 கோடி செலவுக்கான 78 கோப்புகள் மட்டுமே ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.5.93 கோடிக்கான கோப்புகள் மாயமானதை விசாரணை அதிகாரி அலெக்ஸ் ஜிவதாஸ் கண்டுபிடித்து அறிக்கை செய்துள்ளார்.

மேலும் கடந்த 2019 ஆண்டு 10 கோடி விளம்பர முறை கேடு தொடர்பாக, விசாரணை அதிகாரி அலெக்ஸ் ஜீவதாஸ் அறிக்கை சமர்ப்பித்தார். அதன்படி ஆவணங்களை அழித்தும் நிதிஇழப்பு ஏற்படுத்தியும், அதற்கு உடந்தையாக செயல்பட்ட ஆவின் அதிகாரிகள் மற்றும் தணிக்கை துறை அதிகாரிகள் ரமேஷ் குமார், ரவி, ஜெயபாலன், சந்திரசேகரன், ரவிச்சந்திரன், லோகநாதன் மற்றும் மோசடியில் ஈடுபட்ட கூட்டுறவு துறை கூடுதல் பதிவாளர் ஆகியோர் மீது குற்றவியல் நடவடிக்கை, ஒழுங்கு நடவடிக்கை, மற்றும் வசூல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

ALSO READ | ஆவின் நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு: 10, 12 ஆம் வகுப்பு மற்றும் ITI மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News