அடுத்தவர் உழைப்பில் ஸ்டிக்கர் ஒட்டுகிறது திமுக - அண்ணாமலை கடுமையான விமர்சனம்

தங்களால் எதுவும் உருப்படியாக செய்ய முடியாது என்று நம்புவதால் அடுத்தவர் உழைப்பில் ஒட்டி பிழைக்க, ஸ்டிக்கர் ஒட்டுகிறதா திமுக என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Sep 16, 2022, 06:56 PM IST
  • அடுத்தவர் உழைப்பில் ஸ்டிக்கர் ஒட்டுவதா திமுக என அண்ணாமலை விமர்சனம்
  • மத்திய அரசின் சாதனைக்கு திராவிட ஸ்டிக்கர் ஒட்டப்படுவதாக குற்றச்சாட்டு
  • தமிழக அரசால் உருப்படியாக எதுவும் செய்ய முடியாதென்றும் தாக்கு
அடுத்தவர் உழைப்பில் ஸ்டிக்கர் ஒட்டுகிறது திமுக - அண்ணாமலை கடுமையான விமர்சனம் title=

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “கடந்த 40 ஆண்டுகளுக்கு மேல் நரிக்குறவர்கள், குருவிக்காரர்கள் சமூகங்கள் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என போராடி வந்தனர். காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் அவர்கள் கொடுத்த மனுக்கள் எல்லாம் கிடப்பில் போடப்பட்டன. பின்னர் நரிக்குறவர்கள், குருவிக்காரர்கள் சமூகத்தினர், பல்வேறு அமைப்பினர் தமிழ்நாடு பாஜக அலுவலகத்திற்கு வந்து, தங்கள் குறைகளை கூறினர். அந்த கோரிக்கையை பிரதமர் மோடியின் தனிப்பட்ட கவனத்திற்கும் மத்திய அரசின் எஸ்.டி பிரிவின் பதிவாளர் கவனத்திற்கும் கொண்டு சென்றோம். 

இந்த நிலையில் மோடி தலைமையில் டெல்லியில் கூடிய மத்திய அமைச்சரவைக் கூட்டம், நரிக்குறவர்கள், குருவிக்காரர்கள் சமூகங்களை மாநில பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வகை செய்யும் அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது. நரிக்குறவர் சமுதாய மக்கள் தங்களின் 40 கால கோரிக்கையை நிறைவேற்றி வைத்த பிரதமர் மோடிக்கும், மத்திய அரசுக்கும், வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க | 'ஸ்டாலின் ஒரு பொம்மை... மகன், மருமகன், மனைவிதான் எல்லாம்...' - செங்கல்பட்டில் சீறியெழுந்த இபிஎஸ்

பிரதமர் மோடியின் நடவடிக்கையால், மத்திய அரசு செய்த இந்த சாதனைக்கு, வழக்கம்போல திமுக தனது திராவிட ஸ்டிக்கர் ஒட்டும், வேலையை செய்வது வேடிக்கையாக இருக்கிறது. அடுத்தவர் சாதனைக்கு தங்கள் அட்ரசை ஒட்டுவதுதான் திராவிட மாடலா? தங்களால் எதுவும் உருப்படியாக செய்ய முடியாது என்று நம்புவதால் அடுத்தவர் உழைப்பில் ஒட்டி பிழைக்க, ஸ்டிக்கர் ஒட்டுகிறதா திமுக.

முதலமைச்சரின் ஒற்றைக் கடிதத்தில் மத்திய அரசு இப்படி வேலை செய்யும் என்றால் அவர்கள் ஆட்சிக் காலத்திலேயே இன்னும் எளிதாக குருவிக்காரர்கள் கோரிக்கையை தங்கள் அமைச்சர்களை வைத்தே நிறைவேற்றித் தந்திருக்கலாமே.

மேலும் படிக்க | 40 தொகுதிகளுக்கு குறி; நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் திமுக - ஸ்டாலின் போட்ட கட்டளை

திரௌபதி முர்மு நமது நாட்டின் ஜனாதிபதி ஆன பின்பு, பழங்குடியின மக்களும், நம் நாட்டின் உயர் பதவிகளில் அமர முடியும் என்பதை பிரதமர் மோடி தனது நடவடிக்கைகள் மூலம்” நிரூபித்தார் என குறிப்பிட்டுள்ளார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News