TNPSC தேர்வில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டு முறையில் முக்கிய மாற்றம்! நீதிமன்றம் அதிரடி

தமிழகத்தில் அரசு பணியில் பெண்களுக்கான 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் திட்டத்தில் திருத்தம் கொண்டு வர சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.   

Written by - Geetha Sathya Narayanan | Last Updated : Sep 8, 2022, 01:38 PM IST
  • பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு என்ற சட்டத்தில் மாற்றம்
  • அரசு வேலைகளில் இட ஒதுக்கீட்டு முறையில் திருத்தம் அமல்
TNPSC தேர்வில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டு முறையில் முக்கிய மாற்றம்! நீதிமன்றம் அதிரடி title=

தமிழகத்தில் ஹரிசான்டல் ஒதுக்கீட்டு முறை, வெர்டிக்கல் ஒதுக்கீட்டு முறை எனப்படும் இருவேறு முறைகளையும் பின்பற்றி பலத்தரப்பட்ட அரசு பணிகளுக்கான ஒதுக்கீடு பொதுவாக கணக்கிடப்படுகிறது. கடந்த 2016 ஆம் ஆண்டு அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு என்ற சட்டம் தமிழகத்தில் இயற்றப்பட்டது. 

அதன்படி தற்போதைய நடைமுறையில் தமிழக அரசு பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகும்போது, ஹரிசான்டல் ஒதுக்கீடு முறையில் பெண்களுக்கான இட ஒதுக்கீடும்,  வெர்டிக்கல் ஒதுக்கீடு முறையில் சமூகப் பிரிவினருக்கான இட ஒதுக்கீடும் கணக்கிடப்பட்டு அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

இவ்வாறு பெண்களுக்கான 30 சதவீத இட ஒதுக்கீடு தவிர்த்து மீதமுள்ள 70 சதவீதப் பணிகளுக்கும் பொதுப்பிரிவில் ஆண்கள், பெண்கள் என இரு பாலினத்தவர்களுக்கும் வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. இதனால் அரசு வேலைவாய்ப்பு ஒதுக்கீட்டு முறையில் சில பாகுபாடு உள்ளதென பொது மக்கள் தரப்பில் பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தில் தொடரப்பட்டன. பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கிய நடைமுறையை சீர்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வந்தது. 

மேலும் படிக்க | மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் எப்போது தொடக்கம்?

இந்நிலையில் சத்தீஸ்வரன் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அடங்கிய அமர்வு, முதலில் பெண்களுக்கான ஒதுக்கீட்டின் அடிப்படையில் 30 சதவீத பெண் விண்ணப்பதாரர்களுக்கு ஒதுக்கி விட்டு, அதன்பின் சமுதாய ரீதியிலான இடஒதுக்கீட்டை பின்பற்றும் நடைமுறையை தமிழக அரசும், அரசுப் பணியாளர் தேர்வாணையமும் பின்பற்றுவது துரதிருஷ்டவசமானது என குறிப்பிட்டனர்.

மேலும், அறிவிப்பு வெளியாகும் முன்பே பெண்களுக்கான ஒதுக்கீட்டு முறையை நடைமுறைக்கு கொண்டு வராமல், நியமனத்தின்போது 30 சதவீதத்திற்கும் குறைந்த பெண் போட்டியாளர்கள் தேர்வாகும் பட்சத்தில் மட்டும் தனிபட்ட முறையில், பெண்களுக்கான 30 சதவீத ஒதுக்கீட்டு சட்டம் பின்பற்றப்பட வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

ஒருவேளை நியமனத்தின் போது பெண்கள் 30 சதவீதத்திற்கும் அதிகமாக தேர்வாகியிருந்தால், இந்த பெண்களுக்கான ஒதுக்கீட்டு சட்டத்தை பயன்படுத்தவேண்டிய அவசியம் இல்லை என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

இந்த முக்கிய மாற்றம் அமலுக்கு வரும்பட்சத்தில், பெண்களுக்கான அரசு வேலை வாய்ப்பில் சற்று குறுகலான சூழ்நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.

மேலும் படிக்க | 6 பேர் கொண்ட கும்பலால் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வெட்டி படுகொலை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News