தமிழகத்தில் புதிய உச்சம் தொட்ட தக்காளி விலை..! ஒரு கிலோ 220 ரூபாய் வரை விற்பனை..!

Tomato Price Today in Chennai:  தக்காளியின் விலை இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சில்லறை விற்பனையில் தக்காளி கிலோ ஒன்றிற்கு 220 ரூபாய் வரை விற்கப்படுகிறது. 

Written by - Yuvashree | Last Updated : Jul 30, 2023, 10:00 AM IST
  • தமிழகத்தில் புதிய உச்சத்தை தொட்ட தக்காளியின் விலை.
  • கிலோ ஒன்று சில்லறை விற்பனையில் 220 ரூபாய் வரை விற்பனை.
  • கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை நிலவரம்.
தமிழகத்தில் புதிய உச்சம் தொட்ட தக்காளி விலை..! ஒரு கிலோ 220 ரூபாய் வரை விற்பனை..! title=

இந்தியா முழுவதும் தக்காளிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் அதன் விலை பல்வேறு மாநிலங்களில் அதிகரித்து. தக்காளி மட்டுமன்றி பல்வேறு காய்கறிகளின் விலையும் கடந்த சில தினங்களாக உயர்ந்து வருகிறது. ஒரு கிலோ தக்காளி 150 ரூபாயிலிருந்து 180 ரூபாய் வரை கடந்த வாரங்களில் விற்கப்பட்டது. இதனுடன் சேர்த்து, சின்ன வெங்காயத்தின் விலையும் அதிகரித்து வந்தது. உச்சம் தொட்ட தக்காளியின் விலையை குறைக்க அரசும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் எதுவும் பலனளிக்காமல் போக, தக்காளியின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. 

இன்றைய தக்காளி விலை நிலவரம்..

கடும் மழை காரணமாக தமிழகத்தின் அண்டை மாநிலங்கள் உள்பட தென்னிந்தியாவின் பல மாவட்டங்களில் தக்காளியின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. சென்னையில் உள்ள கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளியின் விலை இன்று 160 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இது, சில்லறை விற்பனையில் ஒரு கிலோவிற்கு 200 ரூபாய் முதல் 220 ரூபாய் வரை விற்கப்படுகிறது. 

மேலும் படிக்க | விபச்சார தடுப்பு பிரிவு போலீசாரால் விஜய் மக்கள் இயக்க நிர்வாகி கைது!

கோயம்பேட்டில் நேற்று ஒரு கிலோ தக்காளி 170 ரூபாய் வரை விற்கப்பட்டது. இன்று 10 ரூபாய் அதிகரித்து கிலோ ஒன்றிற்கு 180 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அம்பத்தூர், ஆவடி, தாம்பரம் ஆகிய பகுதிகளில் 20 முதல் 25 லாரிகளில் மட்டுமே தக்காளி லோடு வந்து இறங்கியுள்ளது. ஆதலால், இந்த பகுதிகளில் ஒரு கிலோ தக்காளியின் விலை 220 ரூபாய் வரை விற்கப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். வழக்கமாக 80 லாரிகளில் வரும் தக்காளியின் வரத்து சமீபத்தில் குறைந்துள்ளதால் இந்த விலையை நிர்ணயித்து தக்காளி விற்பனை செய்வதாக வியாபாரிகள் அறிவித்துள்ளனர். 

விலை உயர்வுக்கான காரணம்..

தக்காளியின் விலை கடந்த மாதத்தில் இருந்து அதிகரித்து வந்தது. இதற்கு காரணம் என்ன என்று பலரும் ஆராய்ந்ததில் சில தரவுகள் கண்டுபிடிக்கப்பட்டன. கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தக்காளி விவசாயிகள் பலர் தக்காளி உழுவதை விட்டுவிட்டு வேறு காய்கறிகளை பயிரிட்டதும் தக்காளி விலை உயர்வுக்கு காரணம் என கூறப்பட்டது. மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பூச்சுகளால் தக்காளி பழுதடைந்து தக்காளி விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதுதான் அவர்கள் வேறு பயிர்களை விளைவித்ததற்கு காரணம் என சொல்லப்படுகிறது. உத்தர பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில்தான் அதிகம் தக்காளிகள் பயிரிடப்படுகிறது. இங்கிருந்துதான் பிற மாநிலங்களுக்கும் தக்காளிகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. பூச்சி பிரச்சனை இந்த மாநிலங்களில் எழுந்ததால்தான் தக்காளிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது ஆங்காங்கே கனமழை பெய்து வருவதனால் காய்கறி ஏற்றுமதியில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதுதான் தற்போதைய விலை ஏற்றத்திற்கு காரணம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 

பிற காய்கறிகளின் விலை நிலவரம்..

கோயம்பேட்டில் இன்று தக்காளி மட்டுமன்றி வேறு சில காய்கறிகளின் விலைகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதன் முழு விவரம், இதோ. 

-அவரக்காய்-கிலோ ஒன்றிற்கு சுமார் 40  ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பீட்ரூட் மற்றும் கத்திரிக்காய் கிலோ ஒன்றிற்கு தலா 40 முதல் 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 

-பச்சை குடைமிளகாய் கிலோவுக்கு 70  ரூபாய்க்கும் சிகப்பு குடைமிளகாய் கிலோ ஒன்றிற்கு 180 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன. 

-கேரட் ஒரு கிலோவுக்கு 50 ரூபாயாகவும் பீன்ஸ் ஒரு கிலோவுக்கு சுமார் 80 ரூபாயாகவும் விற்கப்படுகிறது. 

-பெரிய வெங்காயம் ஒரு கிலோவுக்கு சுமார் 22-25 ரூபாயாகவும் சின்ன வெங்காயம் ஒரு கிலோவுக்கு 150 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 

-நாட்டுத்தக்காளி கிலோ ஒன்றிற்கு 130-140 ரூபாய்க்கும், பெங்களூர் தக்காளி ஒரு கிலோவிற்கு 140-150 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 

-சிறிய உருளைக்கிழங்கு கிலோவுக்கு 60 ரூபாயாகவும் பெரிய உருளைகிழங்கு ஒரு கிலோவுக்கு 30 ரூபாயாகவும் விற்கப்படுகிறது. 

மேலும் படிக்க | ஜெயலலிதாவை வைத்து டிடிவி தினகரன் குடும்பம் கொள்ளையடித்தது - திண்டுக்கல் சீனிவாசன்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News