தமிழகத்தில் கடந்த 70 ஆண்டுகளாக உள்ள அரசியலால் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை என இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவர் மன்சூர் அலிகான் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரணமாக ஒரு பைசா கூட கொடுக்காத பிரதமர் மோடி, வாக்கு சேகரிப்பதற்காக வருவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை நந்தனத்தில் இன்று நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றுகிறார். இதற்காக பிரதமர் மோடி தமிழகம் வரவுள்ள நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
காட்பாடியில் திமுகவினர் மத்தியில் பேசிய அமைச்சர் துரைமுருகன், இம்முறை வட மாநிலங்களில் பாஜகவுக்கு தோல்வி உறுதி என்றார். பிரதமர் மோடி 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தும் எதையும் செய்யவில்லை என்றும் விமர்சித்தார்.
இந்தியாவிலும் தமிழகத்திலும் வாரிசு அரசியல் நடந்து வருகிறது. கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக நடக்கும் இந்த அரசியலால் தமிழக மக்களுக்கு எந்த பயனும் இல்லை என்று மன்சூர் அலிகான் பேசி உள்ளார்.
TN BJP President Annamalai: மக்களவை தேர்தலில் போட்டியிட நான் தயாராக இருக்கிறேன் என்று சொல்லவே இல்லை என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
Chennai Traffic Diversion: பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னைக்கு வர இருக்கும் நிலையில், முக்கிய சாலைகளில் செய்யப்பட உள்ள போக்குவரத்து மாற்றங்கள் குறித்து இதில் காணலாம்.
பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த மக்களவை உறுப்பினரும், முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரும் ஆன டாக்டர் ஹர்ஷ்வர்தன், தான் அரசியலை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார்.
PM Modi's Chennai Visit: பிரதமர் மோடி நாளை தமிழகம் வரவுள்ள நிலையில், அவர் பங்கேற்க உள்ள நந்தனம் பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
வாக்குறுதிகளை நிறைவேற்றும் திமுக முக்கியமா, இந்த நாட்டையே பாசிஸம் செய்கிற பாஜகவை வீழ்த்துவது முக்கியமா என்று மார்க்சிஸ்ட் கம்யூயினிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
BJP Lok Sabha Candidate List: பாஜக வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியலில் ஆச்சரியங்களுக்கும் பஞ்சமில்லை. இதில் பலரை பெரும் வியப்பில் ஆழ்த்திய ஒரு பெயர் கேரளாவின் மலப்புரம் தொகுதியின் வேட்பாளர் பெயராகும்.
வரும் நாடாளுமன்ற தேர்தல் வெறும் தேர்தல் அல்ல நாட்டை காக்கக்கூடிய போர் என வேலூரில் நடைபெற்ற எல்லோருக்கும் எல்லாம் பொதுக்கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.