ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரத்தை ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தொடங்கியுள்ளார்.
ஜெயலலிதா மறைவை அடுத்து, அவர் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்பு மனு தாக்கல் 16-ம் தேதி துவங்கி 23-ம் தேதி வரை நடைபெற்றது. ஏப்ரல் 15-ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் எதிர்க்கட்சி ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக மட்டும் செயல்படுகிறது என்று கூறியிருந்தார். அதற்கு பதில் அளிக்கும் விதமாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக சட்டசபையில் இன்று பட்ஜெட் பொது விவாதம் தொடங்குகிறது. இந்த கூட்டம் வரும் 24-ம் தேதி வரை நடைபெறும்.
கடந்த மார்ச் 16-ம் தேதி 2017- 18 ம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்தார். பட்ஜெட் உரைக்கு பிறகு அவை ஒத்திவைக்கப்பட்டது. சட்டசபை பட்ஜெட் கூட்டம் மார்ச் 24 வரை நடக்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.
பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் ஜெயக்குமாருக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“குற்றவாளி” வழிகாட்டுதலில் செயல்படும் பினாமி அரசின் நிதியமைச்சர் ஜெயக்குமார் பட்ஜெட் தாக்கல் செய்யும் நடைமுறையில் அழிக்க முடியாத கரும்புள்ளியை வைத்து விட்டார்.
பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் ஜெயக்குமாருக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“குற்றவாளி” வழிகாட்டுதலில் செயல்படும் பினாமி அரசின் நிதியமைச்சர் ஜெயக்குமார் பட்ஜெட் தாக்கல் செய்யும் நடைமுறையில் அழிக்க முடியாத கரும்புள்ளியை வைத்து விட்டார்.
நடிகர் கமல்ஹாசனுக்கு 65 வயதுக்கு பிறகுதான் ஞானோதயம் வந்துள்ளது என்று சேலத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள போஸ் மைதானத்தில் நடைபெற்ற விழாவில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
விஸ்வரூபம் படம் வெளிவருவதற்கு உதவியவர் ஜெயலலிதா. நன்றி மறந்து பேசுகிறார் கமல். கிராமங்களுக்கு சென்று மக்களை என்றாவது சந்தித்திருக்கிறாரா கமல்.
65 வயதுக்கு பிறகுதான் அவருக்கு ஞானோதயம் வந்துள்ளது எனக் கூறினார். மேலும் ஆட்சி தொடரக்கூடாது என்கிறார் கமல் என்றும் முதல்வர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆர்.கே.நகர் தொகுதி தேர்தலில் அதிமுக தான் வெற்றி பெரும் என அதிமுக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
அதிமுக என்பது அம்மாவின் வழிகாட்டுதலின் படி செயல்படும் இயக்கமாகும். ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக மாபெரும் வெற்றியை பெறும். அப்போது அதிமுக மீது நீங்கள் கொண்டுள்ள சந்தேகங்கள் அனைத்துக்கும் விடை கிடைக்கும். அதிமுக கட்டுகோப்புடன் உள்ள இயக்கமாகும்.
இலங்கை சிறையிலிருந்து 85 மீனவர் விடுதலை செய்ய அந்நாட்டு அரசு முன்வந்துள்ளதாக வெளியுறவு செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக வெளியுறவு செய்தித் தொடர்பாளர் கோபால் பாக்லே கூறியதாவது:-
இலங்கை சிறைகளில் உள்ள 85 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய அந்நாட்டு அரசு முன்வந்துள்ளது. மீனவர் மீது நாங்கள் துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை என இலங்கை அரசும், அந்நாட்டு கடற்படையும் கூறியுள்ளன. இது குறித்து விசாரணை நடத்தவும் ஒப்புக்கொண்டுள்ளன.
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு முதல்வர் பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்திய கடல் எல்லையில் ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்கரை துப்பாக்கிச்சூடு நடத்தியது.
இதில், ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தை சேர்ந்த பிரிட்சோ(22) என்பவர் கழுத்தில் குண்டு பரிதாபமாக உயிரிழந்தார். பிரேதப் பரிசோதனை முடிவுற்ற நிலையில், மீனவரின் உடலை வாங்க அவரது உறவினர்கள் மறுப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தியாவுக்கு தாம்பரம் விமானப்படை தளம் தான் முதுகெலும்பு என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பெருமிதத்துடன் கூறினார்.
2 நாள் சுற்றுப்பயணமாக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் கவர்னர் வித்யாசாகர் ராவ், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், மற்றும் காஞ்சிபுரம் கலெக்டர் ஆகியோர் அவரை ரவேற்றனர்.
இன்று காலை தாம்பரம் விமானப்படை தளத்தில் நடந்த விழாவில் கலைந்து கொண்டார். அவருடன் கவர்னர் வித்யாசாகர் ராவ் மற்றும் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோரும் விழாவில் பங்கேற்றனர்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா தனது வீட்டில் கீழே தள்ளப்பட்டார். பிறகே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் பி.எச்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதைக்குறித்து பி.எச்.பாண்டியன் கூறியதாவது:-
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெ., மரணம் தொடர்பாக, அப்பல்லோ மருத்துவமனை ஒரு அறிக்கை தாக்கல் செய்தது. அதில் டிஸ்சார்ஜ் அறிக்கையும் இடம் பெற்றுள்ளது. அதில் பல தகவல்கள் கூறப்பட்டுள்ளன.
தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொடங்கியது.
முதல்-அமைச்சராக பதவி ஏற்ற எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவையின் முதலாவது கூட்டம் நடக்கிறது.
3 நாட்கள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய அமைச்சர்கள் நிதின்கத்காரி, வெங்கய்யா நாயுடு, ரவிசங்கர் பிரசாத் ஆகியோரை நேரில் சந்தித்து பேசினார்.
அப்பொழுது தமிழக முதல்வரிடம் தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
டெல்லி சென்ற தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி முதலில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இதையடுத்து மத்திய நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சர் வெங்கையா நாயுடுவை சந்தித்தார். அப்போது தமிழக நலனுக்காக பல்வேறு கோரிக்கைகளை எடுத்துரைத்தார்.
டெல்லியில் பிரதமர் மோடியுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு
தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்ற பின்னர் பிரதமர் மோடியை முதல் முறையகா சந்தித்து பேசினார். ஹைட்ரோகார்பன் திட்டம், வறட்சி நிவாரணம், மேகதாது அணை, பவானியில் தடுப்பணை, நீட் தேர்வு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து பேசியுள்ளதாக தெரிகிறது.
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழகம் முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பிரதமர் மோடியை டெல்லையில் சந்தித்து பேசியது முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
சென்னை எண்ணூர் துறைமுகம் அருகே இரண்டு கப்பல்கள் மோதிக்கொண்டதில் கப்பலில் இருந்த கசடு எண்ணெய் கடலில் கசிந்தது. கடற்கரைகளில் ஒதுங்கிய எண்ணெய் கழிவுகளால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் இடைப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 69-வது பிறந்த நாள் விழா இன்று தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் கொண்டாடப்பட்டது. 69 லட்சம் மரக்கன்றுகள் நடும் மாபெரும் திட்டமும் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.
சென்னையில் உள்ள அதிமுக தலைமைக் கழகத்தில் மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் தலைமைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 69-வது பிறந்த நாள் விழா இன்று தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் கொண்டாடப்பட்டது.
சென்னையில் உள்ள அதிமுக தலைமைக் கழகத்தில் மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் தலைமைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.